Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிரின் பிடிவாதம்! வீட்டை விட்டு கிளம்பும் ராஜி! கடும் கோபத்தில் பாண்டியன்! கோமதி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடில், ராஜியின் டான்ஸ் கனவு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல், மற்றும் பாண்டியனின் கோபம் எனப் பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறின. இதுவரைக்கும் ராஜிக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்த கதிர் இப்போது ராஜி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores Vijay TV

ராஜியின் கனவும், பாண்டியனின் கண்டிப்பும்

எபிசோடின் தொடக்கத்தில், ராஜி டான்ஸ் போட்டி விஷயத்தைப் பாண்டியனிடம் பேச வருகிறார். அப்போது கதிர் ராஜியை தடுக்க முயற்சி செய்ய, நான் உங்ககிட்ட பேசல மாமா கிட்ட தான் பேசணும் என்று சொல்கிறார். அதைக் கேட்டு குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாண்டியன், "இந்த விஷயத்தைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் என்னிடம் பேசு" என்று கண்டிப்புடன் கூறுகிறார். ஆனால் ராஜி, "அந்த விஷயத்தைப் பற்றித்தான் பேச வேண்டும்" என்று பிடிவாதமாகச் சொல்கிறார்.

இதனைக் கேட்ட பாண்டியன், "நீ யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. கிளம்பிப் போகிறதாக இருந்தால் போ" என்று கோபமாகச் சொல்கிறார். அதைக் கேட்ட ராஜி, "நான் போயிட்டு வருகிறேன்" என்று சொல்ல, வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். பிறகு பாண்டியன் கோமதியிடம், "அந்தப் பிள்ளையின் இஷ்டப்படி போகட்டும். இனி இந்த விஷயம் குறித்து என்னிடம் யாரும் பேச வேண்டாம்" என்று கோபமாகச் சொல்லிவிடுகிறார். அதோடு அந்த பிள்ளை விஷயமா இனி அவளுடைய புருஷனே எந்த முடிவும் எடுக்கட்டும் என்று சொல்கிறார்.

கதிரும், ராஜியும் வாக்குவாதம்

இதன் பின்னர், ராஜி கதிரிடம் சென்று, "என்னைத் தவறாக நினைக்காதே. நான் கிளம்புகிறேன். நிறைய விஷயங்களில் எனக்கு நீ ஆதரவாக இருந்திருக்கிறாய். இந்த விஷயத்திலும் ஆதரவு கொடுப்பாயா?" என்று கேட்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் ராஜி கேட்காமல் பெட்டியை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வருகிறார். அப்போது எல்லோரும் நீ கிளம்பிட்டியா? கதிர் என்ன சொன்னான் என்று கேட்க, ராஜி எதுவும் பேசாமல் நிற்கும் போது கதிர் அங்கு வந்து கிளம்புவோமா என்று கேட்க அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

பிறகு ராஜி, கதிர் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்கின்றனர். அதைப் பார்த்த கோமதி, "என்ன செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு பாண்டியன் கோமதியை அமைதியாக இருக்க சொல்லிவிடுகிறார். ரோட்டில் சிறிது தூரம் சென்றதும், கதிர் ராஜியிடம் சண்டை போட்டு, "நான் வரல, நீ மட்டும் போ" என்று சொல்லிவிட்டுத் திரும்பி வீட்டிற்கு வந்துவிடுகிறார். கதிர் திரும்பி வந்த பிறகும், கோமதி அவரைத் திட்டுகிறார்.

சென்னைக்கு சென்ற ராஜி

இதற்கிடையில், ராஜி தனியாகச் சென்னைக்கு வருகிறார். அங்கே, டான்ஸ் போட்டி நடக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மீனா ராஜியை போனில் அழைத்து, "உன்னிடம் பணம் எல்லாம் இருக்கிறதா?" என்று கேட்கிறார். ராஜி, தனக்கு எல்லாம் இருப்பதாகச் சொல்லி, டான்ஸ் போட்டி நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். அதோடு தான் எப்படியாவது பரிசை வெற்றி பெற்று கதிர் உடைய பிசினஸுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கனவு அதற்காக குடும்பத்தினர் எல்லாரும் என்னை திட்டினாலும் பரவாயில்லை. நான் வெற்றி பெற்ற அந்த பணத்தை கொடுத்து கதிர் பிசினஸ் தொடங்கியதும் எல்லோரும் என்ன மன்னிச்சிடுவாங்க என்று சொல்லி கொண்டிருக்கிறார். பிறகு டான்ஸ் நடக்கும் இடத்திற்கு ராஜி தனியாக சென்று இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ராஜியின் கனவு, குடும்பத்தில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகச் சென்னைக்குச் சென்றுள்ள ராஜி, தனது டான்ஸ் கனவை எப்படி நிறைவேற்றப் போகிறார்? என்பதையும், பாண்டியன் குடும்பம் இனி என்ன செய்யப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+