Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: சரவணனிடம் தெரிந்த மாற்றம்! பரிதாப நிலையில் மயில்.. பாண்டியன் திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிப்ரவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில், செந்தில் தன்னுடைய முன்னாள் காதலியுன் பேசுகிறார். அதே நேரத்தில் மீண்டும் பாண்டியன் கோபியை திட்டுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

(Pandian Stores 2 serial Feb 10, 2026)கதிர் - ராஜி ஷாப்பிங் சீன்களுடன் எபிசோட் தொடங்குகிறது. கதிர், ராஜிக்கு புடவை வாங்கிக் கொடுத்துவிட்டு, "ஒரு புடவை போதாது, இன்னும் நிறைய எடுத்துக்கோ" என்று சொல்லுகிறார். அதற்கு ராஜி, "எனக்கு ஒன்னே போதும்" என்று மறுக்கிறார். தொடர்ந்து கோமதி மற்றும் அரசிக்கும் ட்ரெஸ் வாங்கப்படுகிறது.

Pandian Stores serial vijay tv

இதற்கிடையில் ராஜி, கதிரைப் பார்த்து, "உனக்கு ஒரு ட்ரெஸ்ஸும் எடுக்கலையா?" என்று கேட்கிறார். அதற்கு கதிர், வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ராஜி, "அதெல்லாம் கிடையாது, நான் ஷர்ட் வாங்கித் தர்றேன்" என்று சொல்லி தானாகவே ஒரு ஷர்ட் எடுத்துக் கொடுத்து வாங்கிக் கொடுக்கிறார்.

இதற்குப் பிறகு அஞ்சலி, சரவணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பேசத் தொடங்குகிறார். அதன்பின் இருவரும் மாறி மாறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் கோமதி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பழனி, சரவணனைப் பார்த்து, "கடையில வேலை எல்லாம் எப்படிப் போகுது?" என்று கேட்கிறார்.

அதனைத் தொடர்ந்து கோமதி, பழனியைப் பார்த்து மச்சான் உன்கூட பேசிட்டாரா? என்று கேட்க, "இனிமேல் நான் அவரை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்" என்று கோமதி சொல்லுகிறார். மேலும், "எனக்கும் அவருக்கும் வேற எதுவும் இல்ல. ஒரே வீட்டில் இருப்போம், அவ்வளவுதான்" என்று கோமதி கூறுகிறார்.

பிறகு பாண்டியன் வந்ததும் கதிர் போர் பண்ணுனானா? என்று சரவணனிடம் கேட்க அதற்கு கோமதி பதில் சொல்லி கொண்டே இருக்கிறார். இதனால் பாண்டியன் கடுப்பாகி திட்ட, இதைக் கேட்ட பழனி, பாண்டியனைப் பார்த்து, "அக்கா பாவம் மச்சான், அவங்களோட கதையும் அப்படிதான்" என்று சொல்லுகிறார். அதற்கு பாண்டியன், "இவள் பாவம் மாதிரி நடிச்சு குடும்பத்தையே ஏமாத்தி இருக்கா. இவள் பாவமா?" என்று கோபமாக கேள்வி கேட்கிறார்.

மறுபக்கத்தில் மயில் சாப்பிடாமல் இருக்க, அவரை தங்கச்சி சாப்பிட கூப்பிடுகிறார். அதை பார்த்து பாக்கியம், "எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பார்.. இங்க இருக்கவங்களுக்கே சாப்பாடு இல்ல, இவ புருஷன் வீட்டுக்கு போகாமல் இங்கே இருக்கா " என்று புலம்புகிறார். அதைக் கேட்ட மயில் தங்கச்சி, தப்பு பண்ணது நீதான் என்று பாக்கியத்தைப் பார்த்து சொல்கிறார்.

அதற்கு பாக்கியம் கோபமாக, "நான் என்ன செய்தேன்? அவளுக்கு புருஷனை கைக்குள்ள வைத்திருக்க தெரியாது" என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட மயில் அழுது கொண்டே ரூமுக்குள்ள போய்விடுகிறார். இதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+