Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்.. கடும் கோபத்தில் மீனா எடுத்த முடிவு.. பரபரப்பான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்திருப்பதால் மூர்த்தி கோயிலுக்கு தேங்காய் உடைத்து தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து ஜீவா ஏழைகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் கொடுப்பதாக வேண்டி இருந்ததாக கூறுகிறார்.

Pandian Stores serial 2023 June 20th Episode full update

அதைக் கேட்ட ஜனார்த்தனன் ஜீவாவை அவமானப்படுத்த அதனால் மீனா கோபமாகி அப்பாவிடம் சண்டை போடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததற்காக மூர்த்தி தேங்காய் உடைத்து கொண்டு இருக்க அதை பார்த்து முல்லையின் அப்பா கண் கலங்குகிறார். பிறகு மூர்த்தியும் தனமும் அவரை சமாதானம் படுத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஜீவா வீட்டிற்குள் போனில் பேசிய படியே சாப்பாடு செய்ய சொல்லி கூறிக் கொண்டிருக்கிறார். அதைக்கேட்ட மீனாவின் அப்பாவும் அம்மாவும் என்ன என்று விசாரிக்கின்றனர். அப்போது முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துச்சுன்னா ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கிறதா வேண்டிகிட்டேன் என்று சொல்ல அதை ஜனார்த்தனன் நக்கல் செய்கிறார்.

அப்போது நீங்க உங்க தம்பி கடையில ஆர்டர் கொடுத்ததுனால இலவசமா செய்ய சொல்லிட்டீங்களா? என்று விசாரிக்க, இல்ல வெளியே என்ன விலை கொடுக்குறாங்களோ அதே விலைக்கு தான் நான் அங்கேயும் பேசி இருக்கேன் என்று சொல்ல அதைக் கேட்டு மீனாவின் அப்பாவும் அம்மாவும் ஜீவா கிளம்பியதும் திட்டுகின்றனர். ஏற்கனவே ஒரு தம்பி குழந்தை பிறந்ததற்கு அன்னதானம், இனி அடுத்து இன்னொரு தம்பியும் இன்னொரு அண்ணனுக்கும் குழந்தை பிறக்கும் அப்ப என்னவெல்லாம் பண்ண போறாரோ என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதைக் கேட்ட மீனா உனக்கு இதை பொறுத்துக்க முடியலன்னா இங்க இவ்வளவு தூண் இருக்கு பாரு இதுல முட்டிக்கோ என்று திட்டிவிட்டு போகிறார். பிறகு மீனா தண்ணி எடுத்துட்டு வரும் வழியில் மீனாவின் அப்பா அவங்க அண்ணன் தம்பிக்கலாம் இந்த மாதிரி வசதி இல்ல ஆனா நம்ம மாப்பிள்ளைக்கு கோடிக்கணக்கா எடுத்து செலவழிக்க பணம் இருக்கு இல்ல அதான் செலவழிக்கிறாரு என்று கூறிக் கொண்டிருக்க அந்த அதைக் கேட்டு மீனா அப்பாவிடம் என்ன சொன்னீங்க என்று கேட்க, அவர் இல்லை நான் ஒன்னும் பேசல என்று சமாளிக்கிறார்.

அதற்கு இல்லையே நீங்க எவன் அப்பா வீட்டு காசு எடுத்து செலவழிக்கிறாருன்னு கேட்டீங்க என்று கோபப்பட்டு 100 பேருக்கு சாப்பாடு போட ஒரு 5000 ரூபாய் ஆகுமா? ஆனா இவன் இங்க எவ்வளவு வேலை பார்க்கிறான் காலையில 8:00 மணியிலிருந்து ராத்திரி வரைக்கும் கடையில தான் இருக்கான். அதுக்கு நீங்க சம்பளமா கொடுக்குறீங்க என்று கேட்க? நான் தான் எடுக்க சொல்றேன் மாப்பிள்ளை எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.

பிறகு இது ஜீவாவிற்கு அவருடைய நண்பர் ஒரு இடத்தை முடிச்சு கொடுத்ததற்காக கொடுத்த பணத்திலிருந்து தான் செய்கிறான். உங்கள் காசுல இருந்து அவன் எதுவும் செய்யல என்று மீனா திட்டி மேலும் அவன் ஒன்னும் அவன் வீட்ல உட்கார்ந்து உங்க சொத்த அபகரிச்சிட்டு இருக்கல. இங்க வந்ததால உங்களுக்கு தான் லாபம் அவன் இங்க அவ்ளோ வேலை பார்க்கிறதால தான் நீங்க இங்க ஜாலியா உக்காந்து இருக்கீங்க. அதை மறந்துட்டு பேசாதீங்க என்று திட்டி விட்டுப் போகிறார்.

அதைத்தொடர்ந்து முல்லை ஹாஸ்பிடலில் இருக்க முல்லைக்கு கதிர் சாப்பாடு ஊட்டி விட்டு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் எல்லோருக்கும் பார்சல் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்க சாப்பாடு வாங்க வருபவர்கள் பலர் சாப்பாடு வாங்கிவிட்டு இருவரையும் ஆசீர்வாதம் செய்து கொண்டு போகின்றனர்.

அதைத் தொடர்ந்து முல்லை தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொல்ல குழந்தை இருக்கும் அறையில் கதிர் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். பின்பு மீண்டும் முல்லையை படுத்து தூங்க வைத்து கதிர் அருகிலேயே இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் முல்லைக்கு தலை சீவி விடுகிறார் கதிர் . அதே நேரத்தில் ஹாஸ்பிடலில் மொத்த குடும்பமும் காத்திருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+