கிராமத்தில் ஓர் நாள்... இப்போ பட்டிக்காடா பட்டணமா ஆயிருச்சா?
சென்னை:சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் பட்டிக்காடா பட்டணமா என்று ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவியில் ஞாயிற்று கிழமைகளில் அந்த நேரத்தில் நம்ம ஊரு ஹீரோன்னு முதலில் நடிகர் விஷால் நடத்திக்கிட்டு இருந்தார்.
அதன் பிறகு மக்கள் நாயகன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை வேறு மாதிரி நடத்திக்கிட்டு இருந்தார். இப்போது அந்த நேரத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா என்கிற நிகழ்ச்சியை சன் டிவி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது.

கிராமத்தில் ஓர் நாள்
முன்பு கிராமத்தில் ஓர் நாள்னு இந்த ரியாலிட்டி ஷோ நடத்திகிட்டு இருந்தாங்க.. சன் டிவியின் சீரியல் குடும்ப நட்சத்திரங்கள் இதில் கலந்துக்குவாங்க.முதலில் கிராமத்தில் விழா மாதிரி நடத்தி, பிறகு நட்சத்திரங்களுக்கு வித விதமான போட்டி வைப்பார்கள்.

கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது
சேற்றிலும், சகதியிலும்,, தண்ணீரிலும்தான் இந்த விளையாட்டை நடத்துவாங்க. ஒவ்வொருத்தரும் உருண்டு புரண்டு இழுத்து புடிச்சுகிட்டு விளையாடறது பார்க்க காமெடியாக இருந்தாலும், முழு கவர்ச்சியான ஷோவாக இது இருந்துச்சு

பட்டிக்காடா பட்டணமா
இப்போ இந்த வாரம் முதல் பட்டிக்காடா பட்டணமா என்று ரியாலிட்டி ஷோ இது போல கிராமத்தில் சென்று நடத்துவது போல ப்ரோமோ இருக்கிறது. நகரத்து கதைகளில் நடிக்கும் சீரியல் குடும்பத்துக்கும்,. பட்டணத்து கதை சேர்ந்த சீரியல் குடும்பங்களுக்கும் இடையே போட்டி நடக்கும் என்று தெரிகிறது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இதில் கலந்து கொள்பவர்கள் நிச்சயம் இளம் பெண்கள் மட்டும்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

எல்லா சேனல்களிலும் பெண்களை
இப்போது எல்லா சேனல்களிலும் சீரியல்களில் நடிக்கும் இளம் பெண்களை இப்படி நனைக்காமல் எந்த ரியாலிட்டி ஷோவும் நடத்துவதில்லை. கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா...












Click it and Unblock the Notifications