சும்மா.. பளபளன்னு.. பாலிஷ் போட்ட மாதிரி இருக்கு.. ஜிவ் ஜிவ் பவித்ரா!
சென்னை: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என ரசிகர்கள் கவிதை பாட கண்டுகொள்ளாமல் போனை நோண்டியபடி க்யூட்டான எக்ஸ்பிரஸன் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார் பவித்ராலட்சுமி.
ஆனாலும் இந்த அழகு போதாது என சிலர் எக்ஸஸ் அழகிற்காக மெனக்கெட்டு பியூட்டி பார்லர்களில் தவம் கிடக்கின்றனர்.
ஆனால் தற்போது பியூட்டி பார்லர்கள் எல்லாமே மூடி விட்ட நிலையில் நான் எப்போதும் நேச்சுரலாகவே அழகுதான் என பெருமை பொங்க சொல்கிறார் பவித்ரா.

சிலிர்க்க வைக்கும் அழகு
தன்னுடைய அழகே அழகு பாடும் வகையில் சிம்பிளாக வந்து சிலிர்க்க வைத்து இருக்கும் பவித்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் குஷியில் ஹார்டின் களை பறக்கவிட்டு விதவிதமாக மாகவும் வித்தியாசமாகவும் பவித்ராவை ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் வித்தியாசமாகவும் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்தது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் .

குக் வித் கோமாளி
இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களில் ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்தாலும் இப்ப வரைக்கும் இந்த சீசனில் உள்ள எபிசோடுகளை அடிக்கடி ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் .சமூக வலைத்தளங்களிலும் இந்த எபிசோடுகள் உலா வருகின்றது .காரணம் இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வந்தனர் .

சூப்பர் வரவேற்பு
அதுவும் அதில் கலந்து கொண்ட கன்டஸ்டண்ட் கள் இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் தற்போது இவர்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது .அதுபோலத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பவித்ரா லட்சுமியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு சின்னத்திரையிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகிவிட்டார்.

குறும்படத்திலும் நடிப்பு
இந்த நிகழ்ச்சியில் இவர் புகழ் உடன் ஜோடியாக கலந்து கொண்ட எபிசோடுகள் எல்லாமே தாறுமாறாக வைரலாகி வந்தது. இதற்கு முன்பு இவர் ஷார்ட் பிலிம் களிலும் பல நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார் .ஆனால் இந்த நிகழ்ச்சியில் தான் இவருக்கு பெரிய அடையாளமாக இருந்து வருகிறது .இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் பல கடை திறப்பு விழாக்கள் முதல் கல்லூரி விழாக்கள் வரை பலவற்றிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

போரடிக்குது
தற்போது இருக்கும் சூழ்நிலையில் லாக்டவுண்ட் காரணமாக எந்த படப்பிடிப்பும் நடைபெறாததால் மக்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். திரை பிரபலங்களும் வீட்டிலேயே அடைந்திருக்கின்றன். மக்களுக்கு பொழுதுபோக்காக அனைவரும் டிவியை நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதில் வரும் கொரோனா நியூஸ் அனைவரையும் கதிகலங்க வைத்து இருக்கிறது .

சூப்பர் போஸ்
அதனால்தான் இளைஞர்கள் முதல் சிறியவர்கள் வரை போனை எடுத்து நொன்டலாம்னு ஃபுல்லா சார்ஜ் போட்டு வைத்து நெட்டு காலியாகிற வரைக்கும் சமூக வலைத்தளத்தை சுற்றி வருகின்றனர். இணைய தளத்திலே காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்காக பவித்ரா தன்னுடைய போனை நோக்கியபடி கலக்கலாக போஸ் கொடுத்து கேஷுவலாக போட்டோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications