மேடையிலே டிஜே பிளாக்கிடம் காதலை கூறிய பூஜா..ஒரு வழியா வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பூஜா டிஜே பிளாக் இடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதைக்கேட்டு சந்தோஷமான டிஜே பிளாக் அதற்கு தகுந்தது போல பாட்டை போட்டு கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.
இதைப் பார்த்து கடுப்பான பிரியங்கா மேடையிலே இருவரையும் திட்டி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பு வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பூஜா இப்போது பைனலிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கிறார். அதற்கு அவருடைய திறமை மட்டும் அல்லாமல் அவருக்கு பாட்டு போட்டு பிரபலம் ஆகிய டிஜே பிளாக்கும்தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
டிஜே பிளாக் ஆரம்பத்தில் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் முறையாக டிஜே இல்லாத நேரத்தில் கலந்து கொண்ட போது அவரை பிரபலப்படுத்தியது பிரியங்கா தான். பிரியங்கா தன்னுடைய தம்பி என்று டிஜே பிளாக்கை கிண்டல் செய்த படியே அறிமுகப்படுத்த அப்படியே அவருக்கு பெரிய பிரபலமும் கிடைத்துவிட்டது.
டைமிங் காமெடி மற்றும் பாடல்கள் மூலமாக போட்டியாளர்களையும் தொகுப்பாளர்களையும் கலாய்த்து வந்த டிஜே பிளாக் என்று தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகிவிட்டனர். இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் அதிகமாக பூஜாவிற்கு சப்போர்ட் செய்து அவரை காதலிப்பது போன்று பாடல்களும் கவிதைகளும் அடிக்கடி ஒலிக்க செய்து கொண்டிருக்கிறார். இதனாலே ரசிகர்களுக்கு இவர்கள் மீது சந்தேகமும் வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நாங்கள் உண்மையில் காதலிக்கவில்லை. நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வார எபிசோட்டில் மாகாபாவிற்கு பதிலாக குரோஸி கலந்து கொண்டிருந்தார். வழக்கம் போல பிரியங்காவும் தொகுப்பாளராக கலந்து கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பூஜா மற்றும் அருணாவை மேடைக்கு குரோஸி அழைக்கும்போது முதலில் அருணா மட்டும் வந்து விட அருணாவிற்கு தங்கச்சி பாட்டை போட்டு டிஜே பிளாக் வரவேற்று இருந்தார். அதைத் தொடர்ந்து குரோஸி கூப்பிட்டதால் வந்த பூஜாவிடம் பிரியங்கா கிண்டல் செய்து கொண்டிருக்க மேடையிலே டிஜே பிளாக் ஐ லவ் யூ என்று பூஜா கூறிவிட்டார். உடனே டிஜே பிளாக்கும் சொல்லிட்டாளே அவ காதல என்னும் பாடலை போட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த அதிர்ச்சியான பிரியங்கா இந்த காதலிக்கிற பசங்கள நம்பவே முடியாது. எப்பவும் வெளியே ஒன்னு சொல்லுவாங்க ஆனா வேற ஒன்னு செஞ்சுட்டு இருப்பாங்க ஆனால் இவங்க இவ்வளவு ஓபனா பேசிட்டாங்களே என்று கூறி இருக்கிறார். இதைப் பார்த்து எங்களுக்கு இருந்த சந்தேகங்களை இவங்க தீர்த்துட்டாங்க அப்போ அடுத்த விஜய் டிவி தம்பதி இவங்கதானா? என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை அனுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications