பிரியங்காவின் திடீர் வருகையால் கண்கலங்கி அழுத குழந்தைகள்...இது வேற லெவல் அன்புதான்
சென்னை: விஜய் டிவியில் மீண்டும் தொகுப்பாளராக பிரியங்கா களமிறங்கியிருக்கிறார்.
பல நாட்களுக்குப் பிறகு பிரியங்காவை பார்த்த குழந்தைகள் குதூகலித்து இருக்கின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளர்
தொகுப்பாளர்கள் என்றதுமே ரசிகர்களின் மனதில் ஒரு சிலர் தொகுப்பாளர்களின் முகம் நினைவுக்கு வரும் அந்த வகையில் பலருக்கும் பரிச்சயமான பிரியங்காவின் முகம்தான் பலருடைய நினைவில் வந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஒரு தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் மூலமாக மேலும் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். தன்னுடைய அல்டிமேட் என தனி திறமையான விளையாட்டால் விளையாட்டுக்கு மட்டும் சுவாரசியம் சேர்க்காமல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய அறிமுகத்தை பார்த்த இவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிகமாக பயந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இவருடைய பெயர் கெட்டு போய்விடும் என்பதுதான் அவர்களுடைய கருத்தாக இருந்தது. ஆனால் என்னதான் ரியாலிடி ஷோவாக இருந்தாலும் அதிலும் நான் நானாக இருப்பேன் என்று கெத்தாக நடந்து கொண்டு அனைவரையும் வியக்க வைத்து இருந்தார். தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இவர் ரன்னர் ஆக அந்த நிகழ்ச்சியில் ஜெயித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால் இவர் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது பலமுறை புலம்பி வந்தார். இந்த நிலையில் தற்போது வெற்றி பெற்று திரும்பிய பிரியங்கா மீண்டும் அந்த சூப்பர் சிங்கர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது பிரியங்காவிற்கு மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

குழந்தைகளை கவர்ந்த அன்பு
தற்போது பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா அறிமுகமானதும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களான குழந்தைகள் ஆனந்தக் கண்ணீர் விட்டு பிரியங்காவை வரவேற்று இருக்கிறது. பல நாட்களுக்கு பிறகு இவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி சென்று கட்டி அணைத்துக் கொள்ளுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுதான் பேரன்பு என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். குழந்தைகளோடு குழந்தையாக மாறிய பிரியங்காவின் லேட்டஸ்ட் நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications