For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவீந்திரநாத் தாகூரின் கோரா...டிடி நேஷனல் சானலில்!

Google Oneindia Tamil News

டெல்லி: டிடி நேஷனல் சானலில் தினமும் 12:30 மணிக்கு கோரா சீரியல் ஒளிபரப்பாகி வருது. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை கதையாக சீரியலில் சொல்லி இருக்கிறார்கள்.

கீதாஞ்சலி என்பது குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளின் தொகுப்பு. ஆகஸ்ட் 14, 1910 இல் இவர் எழுதிய 157 கவிதைகளின் பெங்காலி தொகுப்பு வெளியிடப்பட்டது. பின்னர் தாகூரின் கீதாஞ்சலி கவிதைகளின் தொகுப்பு ஆங்கிலம் மற்றும் இந்திய மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது,.

நயனுக்கு அறம் அமைந்தது போல ஐஸ்வர்யா ராஜேஷுக்கு க/பெ ரணசிங்கம்?நயனுக்கு அறம் அமைந்தது போல ஐஸ்வர்யா ராஜேஷுக்கு க/பெ ரணசிங்கம்?

ஆங்கில மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட தாகூரின் கவிதைத் தொகுப்பு 1913 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்றது. இந்த கீதாஞ்சலியின் டிடி நேஷனல் சானலில் மறு ஒளிபரப்பாகி வருகிறது.

வேறு இந்தி சானலில்

வேறு இந்தி சானலில்

வேறு இந்தி சானலில் கோரா எனும் பெயரில் பல வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வந்த தாகூரின் கீதாஞ்சலி தொகுப்பை, தற்போது டிடி நேஷனல் சானல் வாங்கி மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறதாம்.

லாக்டவுன் விடுமுறை

லாக்டவுன் விடுமுறை

லாக்டவுன் விடுமுறை முடிய இருக்கும் இந்த நேரத்தில் பள்ளிகள் விடுமுறை காலம் சேர்ந்துக்கொள்ள, மக்களுக்கு டிடி நேஷனல் மூலம் நல்லதையே கொடுக்க நினைத்து செயல்பட்டு வருகிறது டிடி நேஷனல் சானல். ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ கிருஷ்ணா போன்ற இதிகாச காவியங்கள்...

குழந்தைகள் பெரியவர்கள்

குழந்தைகள் பெரியவர்கள்

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் மனதில் கொண்டு செயல்பட்டு வரும் டிடி நேஷனல், பெரியவர்களுக்குத் தேவையான இதிகாச தொடர்கள். குழந்தைகளுக்குத் தேவையான சக்திமான், மோட்டோ பட்டு, சந்தமாமா, ஜங்கிள் புக் போன்ற தொடர்களையும் ஒளிபரப்பு வருகிறது.

தாகூர் கவிதைகள்

தாகூர் கவிதைகள்

கவி தாகூரின் கவிதைகளை சீரியலாக மக்களுக்குப் பிடித்த வகையில் படம் பிடித்து காணத் தருவது என்பது ரொம்பவே மெனக்கெட்டு செய்ய வேண்டிய விஷயம். இதை திறம்பட செய்து இருக்கும் சீரியல் குழு, வெற்றியும் கண்டு இருக்கிறது. எனவேதான் டிடி நேஷனல் தாகூரின் கவிதைகளை கதை வடிவில் மக்கள் தெரிந்துக்கொள்ள கோரா சீரியலை தினமும் மதிய நேரத்தில் டிடி நேஷனல் ஒளிபரப்பி வருகிறது.

English summary
Gora Serial airs daily at 12:30 pm on DD National Channel. Rabindranath Tagore has written a collection of poems in serial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X