கமல் சொன்னது பொய்!? பிக் பாஸ் போய்ட்டு வந்துட்டா “அது” நடந்துடுமா? மேடையில் பகீர் கேள்வி கேட்ட ரச்சிதா
சென்னை: சின்னத்திரை நடிகையான ரச்சிதா தான் புதியதாக நடிக்கும் திரைப்பட பூஜையில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அங்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களுடைய வாழ்க்கை மாறி இருக்கிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரச்சிதா யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு எதுவுமே கிடைக்கல. என்னுடைய திறமையின் மூலமாகத்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறதே தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் எனக்கு எந்த வாய்ப்பும் ஸ்பெஷல் ஆக வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது கமல் குறித்தும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறாரே அது பொய்யா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரச்சிதா ஒரு பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது எக்ஸ்ட்ரீம் எனும் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.
போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ரச்சிதா தான் என்னுடைய அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றும் அதோடு கண்டதையெல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் ஆக்குங்கள் என்றும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை அவருடைய படத்திற்கான பூஜை வேலைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற போது அதில் ரச்சிதாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரிய தளம்.
அதில் நம் திறமையை பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை பார்த்து இயக்குனர்கள் பட வாய்ப்பு வழங்குவார்கள். திறமையை பார்த்துதான் வாய்ப்பு வரும் பிக்பாஸுக்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதோடு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாழ்க்கை மாறிவிடும் என்று சொல்கிறாரே, அது பொய்யா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எப்போதுமே இந்த பிக்பாஸால் உங்களுக்கு வாய்ப்பு வரும் என்று சொல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய திறமையை பார்த்து உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல எல்லோருக்கும் உண்மையான திறமை வெளியே வரும் போது தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று அந்த பேட்டியில் ரச்சிதா பேசியிருக்கிறார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications