விஜய் முதல்வர் ஆகுவார் என்று அவரே நம்பல.. எல்லா இடத்திலும் இந்த அமைதி செட் ஆகாது! நடிகர் ராதாரவி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய், இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பல தசாப்தங்களாக திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய அரசியல் களத்தில், புதிய சக்தியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்திருக்கும் விஜயின் வெற்றி அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி திரையுலகிலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜயுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள மூத்த நடிகர் ராதாரவி அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Radha Ravi Vijay Chief Minister Vijay

நடிகர் ராதாரவி பேட்டி

அந்த பேட்டியில் பேசிய ராதாரவி, நடிகராக இருந்த விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

"விஜய் வெற்றி பெற்றது சந்தோஷமான விஷயம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவால் இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆனால் இந்த அளவுக்கு பெரிய வெற்றியை அவரே எதிர்பார்க்கல என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அமைதியான கேரக்டர்

விஜயின் குணநலன் குறித்து பேசிய ராதாரவி, "விஜய் எப்போதும் அமைதியான மனிதர். படப்பிடிப்பு தளங்களில் கூட அவர் தேவையில்லாமல் பேச மாட்டார். தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பார். அந்த கேரக்டரை நான் பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்" என்றார். ஆனால் அதே நேரத்தில், அரசியலில் சில சூழ்நிலைகளில் அமைதி மட்டும் போதாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

பதில் சொல்லியே ஆக வேண்டும்

"ஒருவர் நாளை நீங்கள் ஷூட்டிங்கிற்கு வருவீர்களா என்று கேட்டால், ஆமாம் அல்லது இல்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அது சரியான தகவலை கொடுக்காது. சில விஷயங்களில் அமைதி நல்லது. ஆனால் சில விஷயங்களில் அது தவறான புரிதலை உருவாக்கும்" என்று ராதாரவி கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிந்த விஷயத்தை மட்டுமே பேச வேண்டும்

மேலும் அவர் கூறுகையில், "எந்த அறிக்கையோ, கருத்தோ வெளியிடும்போது அது பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு பேச வேண்டும். தெரியாமல் பேசிவிட்டால் அது தொடர்ந்து எதிர்ப்பையும் விமர்சனத்தையும் உருவாக்கும். பின்னர் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை வரும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராதாரவி யார்?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராதாரவி, பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர்.

சினிமாவுடன் அரசியலிலும் பயணித்து வந்துள்ள அவர், பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். தனது வெளிப்படையான பேச்சாலும் சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருபவர்.

வைரலாகும் பேட்டி

விஜயின் வெற்றியை பாராட்டியதோடு, அரசியல் தலைவராக செயல்பட வேண்டிய விதம் குறித்தும் தனது அனுபவத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகளை ராதாரவி பகிர்ந்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக, "அமைதி நல்லது தான்... ஆனால் எல்லா நேரத்திலும் அமைதி நல்லது இல்லை" என்ற அவரது கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. முதல்வராக புதிய பொறுப்பில் இருக்கும் விஜய், எதிர்காலத்தில் தனது அரசியல் பயணத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+