அந்தப்புரத்தை மறைத்த நடிகை.. நாலஞ்சு கோடி? சிவக்குமார் கிட்ட ஓபனாகவே கேட்ட சரத்குமார்? பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதிகாவின் வாழ்க்கை, பணம் இரண்டிலுமே ஏமாற்றிவிட்டார் விஜயகாந்த்.. ராதிகாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை தந்தவர் விஜயகாந்த் " என்று பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "பிரதாப் போத்தன் என்பவர்தான் ராதிகாவின் முதல் கணவர்.. மலையாள பட உலகில் ஜாம்பவான் பிரதாப்.. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 2 வருட காலம் திருவனந்தபுரத்தில் வாழ்கிறார்கள். இருவரும் இணைந்து மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை எடுக்கிறார்கள். அந்த படம் தேசிய விருது பெற்ற படமாகும்.

television radhika sivakumar

2 வருட காலம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், இவர்களுக்கு குழந்தை இல்லை.. பிறகு கருத்துமோதல் காரணமாக இருவரும் டைவர்ஸ் செய்து கொள்கிறார்கள்.. பிறகு விஜயகாந்தை லவ் பண்ணினார் ராதிகா.. அவருடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார். திருமணம் செய்யவும் விருப்பப்பட்டார். தான் திருமணம் செய்து கொள்ள போகிறவர்தானே என்று நினைத்து, விஜயகாந்த்துக்கு பணம் தந்தார் ராதிகா.

பண உதவி: எல்லாருக்கும் விஜயகாந்த் பண உதவி செய்ததால், விஜயகாந்த்துக்கு ராதிகா பண உதவி செய்தார்.. நான்கைந்து கோடி தந்தார்.. ஆனால், இந்த திருமணம் வேண்டாம் என்று விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர்.. "சினிமா நடிகை வேண்டாம், குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்" என்று ஆலோசனை சொன்னார்..

கடைசியில் ராதிகாவின் வாழ்க்கை, பணம் இரண்டிலுமே ஏமாற்றிவிட்டார் விஜயகாந்த்.. ராதிகாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை தந்தவர் விஜயகாந்த்.

லண்டன் மாப்பிள்ளை: விஜயகாந்த்துக்கு திருமணம் ஆன நேரத்துலேயே, லண்டனில் ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்தார் ராதிகா.. இவர்களுக்கு ரயானா என்ற பெண் குழந்தை பிறக்கிறார். அதிமுக, திமுக என பயணித்தபோதெல்லாம் விஜயகாந்த்தை விமர்சித்து கொண்டே இருந்தார் ராதிகா. பிறகு ரிச்சர்டை விட்டு பிரிந்தார்.
நம்ம அண்ணாச்சி என்ற படத்தில் நடித்துகொண்டிருந்தபோது, ராதிகாவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது.. இதற்காக, சரத்குமாரை 2001-ல்திருமணம் செய்கிறார். தன்னுடைய திருமணத்துக்கான, பத்திரிகையை சிவக்குமாரிடம் ராதிகா வழங்கினார். அப்போது சிவக்குமார், "உன் காசெல்லாம் அழிச்சிடுவாரே" என்று சொல்லி உள்ளார்.

சிவக்குமார்: ஒருமுறை சிவக்குமாரை சந்தித்த சரத்குமார், "நான் ராதிகாவின் பணத்தையெல்லாம் அழிச்சிடுவேன்னு சொன்னீங்களாமே? நானே பெரிய நடிகர்.. நடிகர் சங்க தலைவன்.. ராதிகாவை விட நான் பெரிய ஆள்" என்று சிவக்குமாரிடம் நேருக்கு நேராக கேட்டு சண்டை போட்டார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+