ராஜா ராணி 2 சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்த நடிகை நிகாரிகாவிற்க்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியின் உடல்நிலை குறித்து அவருடைய கணவர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் அண்ணி கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை நிகாரிகா இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் போன்ற சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

சின்னத்திரையில் நடிகைகளாக இருக்கும் பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார்கள். அதுபோல நிகாரிகாவிற்க்கும் இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் அதிகமான போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப்ஆக டைட்டில் வெற்றி பெற்றார்.
நிகாரிகாவின் கணவர் இயக்குனர் ரஞ்சித் தான். இவர்கள் இருவரும் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.
சமீபத்தில் தான் இவர்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் வெளியிட்டு இருந்தார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து தங்களுடைய குழந்தையின் அப்டேட் குறித்தும் இணையத்தில் வெளியிட்டு வருவார்கள். இந்த நிலையில் நிகாரிகாக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
அதோடு தன்னுடைய குழந்தையின் கால் பாதங்களை போட்டோ எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என் மனைவிக்கு நார்மல் டெலிவரி ஆகிவிட்டது. குழந்தையும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்கள். உங்களுடைய சப்போர்ட் மற்றும் ஆசீர்வாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு தேவை என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications