என்ன சின்னய்யா இந்த நேரத்துல... நீங்க போங்கு பண்றீங்க!
சென்னை: ராஜா ராணி சீரியலில் செம்பா படிக்காத பொண்ணு மாதிரியே வெகுளித் தனமா இயல்பா நடிக்கறது நல்லாருக்கு.
கார்த்திக் லேப்டாப் வச்சு வேலை பார்த்துட்டு இருக்கான். அங்க வர்ற செம்பா..சின்னய்யா கோயில்ல நான் பண்ணின சத்தியம் ஜெயிச்சுருச்சுன்னு வருத்தமா உங்களுக்குன்னு கேட்கறா.
இல்லையே நான் பண்ணின சத்தியம்தான் ஜெயிச்சுதுன்னு சொல்றான் கார்த்திக்.நான்தானே சின்னய்யா ஹரீஷுக்கும், வினோதினிக்கும் கல்யாணம்பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினேன்னு சொல்றா செம்பா.
நீ என்ன சொல்லி சத்தியம் பண்ணினேன்னு கேட்கறான். வினோவுக்கும் ஹரீஷுக்கும் கல்யாணம்பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினேன்னு சொல்றா. நான் என்ன சத்தியம் பண்ணினேன்னு கேட்கறான்.
ஒரு நல்ல பையனா பார்த்து வினோவுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சத்தியம் பண்ணினீங்கன்னு சொல்றா. அப்போ ஹரீஷ் நல்ல பையன்தானேன்னு கேட்கறான்.ஆமாம்.. ஆனா, அப்பவே ஹரீஷ் நல்ல பையன்தானே சின்னய்யா..நீங்க போங்கு சின்னய்யான்னு அப்பாவித்தனமா பேசறா செம்பா
கார்த்திக் அவளுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்கறான். அவ பிடிச்சு வாயில போட்டு முழுங்கறா.. என்ன சின்னய்யா இந்த நேரத்துல போயின்னு செம்பா வெட்கப்பட.. என் பொண்டாட்டிக்கு நான் எப்ப வேணா குடுப்பேன்..யார் முன்னாடி வேணா குடுப்பேன்னு சொல்றான்.
ஓ..யார் முன்னாடி வேணா குடுப்பீங்களா அவ்ளோ தைரியம் வந்துருச்சான்னு கேட்கறா. ஏன் என் பொண்டாட்டிக்குத்தானே குடுக்கிறேன்..நான் அடுத்தவன் பொண்டாட்டிக்கா குடுக்கறேன்னு கேட்கறான்.
கொடுத்துதான் பாருங்களேன் சின்னய்யான்னு அவ சொல்ல, என்ன பண்ணுவேன்னு கேட்கறான். அந்த நாக்கை இழுத்து வச்சு முடிச்சு போட்ருவேன்னு சொல்றா செம்பா. என்னது நாக்குக்கு முடிச்சான்னு கட்டிக்கறான் செம்பாவை..
இப்படித்தான் ராஜா ராணி சீரியலில் செம்பா கார்த்தி குடும்ப வாழ்க்கை போயிட்டு இருக்கு.