ராஜா ராணி 2 சீரியல்: ஆல்யா மானஸாவை தொடர்ந்து மற்றொரு நடிகையும் விலகலா? அவருக்கு பதில் இனி இவரா?
சென்னை: ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி ஆகும். இதில் சஞ்சீவும் ஆலியா மானசாவும் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து ராஜா ராணி 2 சீசன் தொடங்கியது. இதில் ஆல்யா மானஸா நடித்து வந்தார். அது போல் சஞ்சீவுக்கு பதிலாக சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலின் போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.

நிறைமாதம்
ஒரு கட்டத்தில் நிறைமாதத்தை அடைந்ததால் ஆல்யா மானஸா அந்த சீரியலிலிருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என யோசித்த நிலையில் மாடல் ரியா சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அந்த சீரியலில் அவர் நடித்து வருகிறார்.

500 எபிசோடு
இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை கடந்து போயுள்ளது. இதில் நடிகை பிரவீனா சிவகாமி கேரக்டரில் நடித்துள்ளார். இவருக்கு இரு மகன்கள், இருவருக்கும் திருமணமாகிவிட்டது. முதல் மகனின் மனைவிதான் அர்ச்சனா, இரண்டாவது மகன் சரவணனின் மனைவி சந்தியா.

அர்ச்சனா வில்லத்தனம்
இதில் சந்தியாவுக்கு எதிராக அர்ச்சனா வில்லத்தனம் செய்து வருகிறார். வில்லி என்றாலே கரடு முரடாக இருப்பதைதான் நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்த சீரியல் வில்லி அர்ச்சனா ஒல்லியான தேகத்தில் அழகாக இருப்பார். இவரது காமெடி கலந்த வில்லத்தனத்தை பார்ப்பதற்காகவே நிறைய பேர் சீரியலை பார்க்கிறார்கள்.

சீரியல்
இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து அர்ச்சனா விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த அர்ச்சனா குமார் நடிக்கலாம் என தெரிகிறது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமே சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி 2
வில்லி கேரக்டரில் கலக்கிய அர்ச்சனா ராஜா ராணி 2-விலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர். ஏற்கெனவே ஆலியா மானஸா விலகிய நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவும் விலகுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications