இஷ்டத்துக்கு பேசிகிட்டு இருக்க கூடாது...இசைவாணிக்கு சூடாக அட்வைஸ் கொடுத்த ராஜூ
சென்னை: பேச வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசக்கூடாது என்று இசைவாணிக்கு ராஜு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
ராஜீவின் அட்வைஸை கேட்டதும் இசை வாணி முகம் மாறிப்போய்விட்டது.
தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முகத்துக்கு நேராக பேசிய ராஜுவை பார்த்ததும் ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

ரசிகர்களை கவர்ந்த ராஜு
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் அணைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு போட்டியாளராக ராஜூ இருந்து வருகிறார். இவர் என்ன பேசினாலும் சரி, அது ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. காமெடியான கேரக்டரால் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இவருடைய மிமிக்கிரி திறமையாலும் எதார்த்தமான காமெடியாளும் எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையையும் இலகுவாக்கி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இமான் அண்ணாச்சிக்கும், இசைவாணிக்கும் அடிக்கடி பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பிடிக்காமல் தான் நடந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் மனதிற்குள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே சிரித்த முகமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரச்சனை தீராது போல
அண்ணாச்சியும், இசைவாணிக்கு இலவசமாக அட்வைஸ் பண்ணுகிறேன் என்று தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் அடிக்கடி கொட்டி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத இசைவாணி மட்டுமல்லாமல் ரசிகர்களும் சில நேரங்களில் ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று யோசித்து வருகின்றனர். கமல் கூட இவர்கள் இருவரின் பிரச்சனையில் இதை தான் கூறியிருந்தார். அதற்கு பிறகு ஒரு சில நாட்களாக இசையின் பக்கம் கவனத்தை திருப்பாமல் இருந்த அண்ணாச்சிக்கு மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை முட்டிக் கொண்டு இருக்கிறது.

ராஜுவின் அறிவுரை
நேற்றைய எபிசோட்டில் அண்ணாச்சியின் பொம்மையை இசைவாணி எடுத்து வைத்துக்கொண்டு எப்படியாவது அவரை விளையாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த வார தலைவர் பதவியில் இருக்கும் இசைவாணி செய்த செயல் சக போட்டியாளர்களையும் குழப்பமடைய செய்திருக்கிறது. அதனால்தான் ராஜு இதற்கான விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு இசைவானணி, அண்ணாச்சியை எனக்கு பிடிக்கும் ஆனால் அவர் இந்த விளையாட்டு விளையாட கூடாது என்று இப்படி செய்தேன் என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்க கூடாது என்று இசைவாணி முகத்துக்கு நேராக அறிவுரை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications