Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மீண்டும் என்ட்ரி ஆகும் ராஜு... எப்போது என விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டரில் மீண்டும் எப்போது என்ட்ரி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

கத்தியாக ராஜூ களம் இறங்குவாரா? ? என்று ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கத்தி கேரக்டரில் ராஜு அறிமுகம்

கத்தி கேரக்டரில் ராஜு அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது பாகம் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகம் ஏற்கனவே பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது. ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் விரைவில் திடீரென்று முடிக்கப்பட்டு இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பாகத்தில் புது கதாநாயகிகள் அறிமுகமானாலும், கதாநாயகனாக அதே செந்தில் தான் நடித்து வருகிறார். அவருக்கு நண்பனாக கத்தி கேரக்டரில் ராஜூ இதுவரைக்கும் நடித்து வந்தார்.

மாற்றப்பட்ட கதைக்களம்

மாற்றப்பட்ட கதைக்களம்

இதுவரைக்கும் கேமராவுக்கு பின்னாடியே வேலை செய்து கொண்டிருந்த ராஜு முதல் முறையாக இந்த சீரியலின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையை ரசிகர்களுக்கு நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீரியலின் கேரக்டரில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், சீரியலில் இவருடைய கதைக்களத்தை மாற்றிவிட்டனர். இவர் துபாய்க்கு வேலைக்கு சென்று இருப்பதாக கதை மாற்றப்பட்டது. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் நடிப்பார் என்பதற்காகவே இவருக்காக புதுநடிகர் யாரையும் அறிமுகப்படுத்தாமல் சீரியல் அணி இருந்து வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்ற பிறகு தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் வெளியே வந்ததும் எப்போது மீண்டும் கத்தி சீரியலில் வருவார் ?? என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த இடத்திற்கு வருவதற்காக கஷ்டங்களையும் பல துயரங்களையும் அனுபவித்து வந்த ராஜு இனி வெள்ளித்திரையில் கதாநாயகனாக வருவாரா?? அல்லது மீண்டும் இந்த சீரியலில் வருவாரா?? என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருகிறது.

ராஜுவின் விளக்கம்

ராஜுவின் விளக்கம்

தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடன் சீரியலில் ஒன்றாக நடிக்கும் காயத்திரியும் இதே கேள்வியை ராஜுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கண்டிப்பாக வருகிறேன். ஆனால் நான் வரும் சீன்களை ஒரு வாரத்திற்கு சஸ்பென்ஸில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று தனக்கே உரிய குறும்பு தனத்தோடு கலாய்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நான் மட்டும் முடிவு செய்தால் முடியாது. சீரியல் அணியினரும் எனக்காக கதை எழுதினால் நான் கண்டிப்பாக சீரியலில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+