Rasaathi Serial: ஏய்யா.. அந்த ராசாத்தி கதைதான் என்னய்யா??
சென்னை: சன் டிவியில் ராசாத்தி சீரியல் ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆயிருச்சு...இன்னும் கதை பிடிபடலைங்க. பரிவட்டம்னு சொன்னாங்க.. விஜயகுமார் கேரக்டரை காணோம். ஜமீன்னு சொன்னாங்க விசித்திரா கேரக்டரையும் காணோம்.
அக்கான்னு இன்னொரு ஜமீன் சவுந்திரவல்லியா தேவயானி வந்து இருக்காங்க.. ஆனாலும் இன்னும் கதை என்னன்னு தெரியலை. கோயில் திருவிழா, பரிவட்டம். பிறகு கல்யாணம் இதுதான் கதை போல.
இதுக்கு நடுவுல எபிசோட் ஓடிக்கிட்டே இருக்கணுமே.. அதுக்கு ராசாத்தி, மேனகா போட்டி போட்டு ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவது.. இதுதான் தொடரும் எபிஸோட்ஸ்.

ராசாத்தி மேனகா
பாண்டியன் ராசாத்தியை காதலிக்கிறான். ராசாத்தியும் பாண்டியனை காதலிக்கிறாள். இடையில் மேனகாவும் பாண்டியனை காதலிச்சதுனால வந்த வினைதான் இப்போ நடக்கும் போட்டிகள்.. சவால்கள். பாண்டியனை ஆசைப்பட்ட மேனகாவுக்கு பாண்டியன் தம்பிதான் புருஷனா கிடைக்கறான்.

ஒரே வீட்டில்
ஒரே வீட்டில் ராசாத்தியும் மேனகாவும் இருக்காங்க. பாண்டியனும் அதே வீட்டில்தான் இருக்கான். தனக்கு கிடைக்காத பாண்டியன், ராசாத்திக்கும் கிடைக்கக் கூடாது என்று சதி செய்வது மேனகாவின் வேலை. அதை முறியடிப்பது ராசாத்தியின் வேலை. சவுந்திரவல்லி குடும்ப போட்டோ எடுக்கணும்னு ஆசைப்படறாங்க.

ராசாத்தி போட்டோவுக்கு
போட்டோவுக்கு ராசாத்தி இருக்க கூடாது என்று நினைக்கும் மேனகா , ராசாத்தியை ரூமுக்குள் வச்சு பூட்டிட்டு, அவளை வெளியில் வர முடியாதபடி செய்து விடுகிறாள். அறைக்குள் மாட்டிக்கொண்டால் ராசாத்தி.. இப்ப அடுத்தது மேனகாவுக்கு தாலி பெருக்கிப் போடும் சடங்கு. இந்தச் சடங்கில் ராசாத்தியை கலந்துக்க விடாம செய்கிறேன் பார் என்று சபதம் போடுகிறாள் மேனகா.

என்கிட்டே சாவி
பாரு மேனகா.. உனக்கு தாலி பெருக்கிப் போடும் சடங்கு நான் இருந்தால்தான் நடக்கும். கையில பாரு சாவி வச்சு இருக்கேன். இந்த சாவியை வச்சு பீரோவைத் திறந்து செயின் எடுத்துதான் உன் தாலியை அதுல கோர்த்து போட முடியும்னு சாவியை எடுத்து நீட்டுகிறாள் ராசாத்தி. இப்படி இருவருக்குமான போட்டி மட்டும்தான் பல எபிசோட் ஓடிக்கிட்டு இருக்கு.












Click it and Unblock the Notifications