"மிஸஸ் ரவி" என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ.. குலதெய்வம் கோயிலில் மகாலட்சுமிக்காக உருகிய ரவீந்தர்
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், அவரது மனைவி மகாலட்சுமியுடன் திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தி போட்டோவை பதிவிட்டுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி திடீரென சமூகவலைதளங்கள், செய்தித்தாள்கள், ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் என பார்த்த இடங்களில் எல்லாம் அசை போட்டது என்றால் அது ரவீந்தர்- மகாலட்சுமியின் திருமணம்தான்.
அண்மையில் விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு பிறகு இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது என்ன காரணம் தெரியுமா.

வனிதா விஜயகுமார்
த.யாரிப்பாளர் ரவீந்தர், நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணத்தை எதிர்த்தார். அதாவது பீட்டர் பால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என விமர்சித்தார். அது போல் மகாலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம். அதிலும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் மகாலட்சுமியும் பிரபலமடைந்தார்.

ஒன்றரை ஆண்டுகள்
இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததே யாருக்கும் தெரியாத நிலையில் திடீரென திருமணம் நடந்ததால் இத்தனை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏதோ பட புரோமோஷனுக்காக என பலர் நினைத்தனர். ஆனால் பிறகுதான் தெரிந்தது அது உண்மை என! மேலும் இரு மனங்களும் ஒத்து போன பிறகு கருப்பு- வெள்ளை, ஏழை பணக்காரன், தடிமன்- ஒல்லி, நெட்டை குட்டை இப்படியான வேறுபாடுகளை பார்ப்பது தேவையற்றது என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை.

திருமணம் பிரபலம்
இப்படிதான் இவர்களுடைய திருமணம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் ரவீந்தரும் மகாலட்சுமியும் சேர்ந்து விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர், இருவரும் தேனிலவுக்கு தனி விமானத்தில் போவதாக போட்டுவிடாதீங்க. நாங்கள் குலதெய்வம் கோயிலுக்குத்தான் போகிறோம் என பதிவு போட்டிருந்தார்.

மகாலட்சுமியுடன் புகைப்படம்
நெட்டிசன்களும் யூடியூப்களும் விடுவார்களா, அவர் எதை போட வேண்டாம் என சொன்னாரோ அதையே தம்ப்நெயிலாக்கிவிட்டனர். இந்த நிலையில் குலதெய்வம் கோயில் வாசலில் நின்று கொண்டு ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். அதில் அவர் சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.
குலம் செழிக்க வந்தவள் நீ
அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ
இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு
நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி
நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி
ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம்
என்றும் உங்கள்
ரவி & மிஸஸ் ரவி
என அந்த பதிவில் போட்டுள்ளார். இதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications