காலில் விழுந்து கெஞ்சினேன்.. காலை தடவ ஹன்சிகா விடவே இல்லை.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு
சென்னை: காலில் விழுந்து கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடவில்லை என நடிகர் ரோபோ சங்கர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்ட வெளிநாட்டு கிளியை வளர்த்த விவகாரத்தில் கிளியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த கிளியை வளர்த்த குற்றத்திற்காக அவருக்கு ரூ 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அடுத்ததாக ரோபோ சங்கரின் உடல் எடை வெகுவாக குறைந்து காணப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு அந்த பிரச்சினை, இந்த பிரச்சினை என பலர் வதந்திகளை பரப்பினர்.

இதெல்லாம் வதந்தி என அவருடைய மகளும், மனைவியும் , அண்ணன் மகளும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என்பதை விளக்கினர். அந்த வகையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதால் அவரது உடல் மெலிந்து காணப்படுகிறது என தெரிவித்தனர்.
மேலும் நெட்டிசன்கள் கூறுவதை போல் மோசமான வியாதி ஏதும் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஒரு கல்லூரி விழாவுக்கு வந்த ரோபோ சங்கர், நான் குடிக்கு அடிமையாகி, அந்த குடி இல்லாவிட்டால் இரவில் தூங்க முடியாமல் தவித்தேன். ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்தேன். எனவே மாணவர்கள் யாரும் மது, போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இநத நிலையில் ஆதி ஹீரோவாக நடித்துள்ள பாட்னர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.
அப்போது அந்த விழாவில் ரோபோ சங்கர் பேசுகையில் பாட்னர் படத்தில் உள்ள கிஸ் சீனை ரொம்ப ரசித்து என்ஜாய் செய்வீங்க. தனிமையில் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஆவலை தூண்டக் கூடிய காட்சி அது. அதே மாதிரி ஹன்சிகா, முதல்ல வாம்மா நீ உண்மையில் ஒரு மெழுகு பொம்மை. மைதா மாவை உருட்டி சுவற்றில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அந்த மாதிரிதான் அவங்க.
ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு சீன் படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவ வேண்டும். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனால் முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்தெல்லாம் கெஞ்சினோம்.
கட்டவிரலையாச்சும் தடவிக்கிறேனு கேட்டோம். முடியாதுனு சொல்லிட்டாங்க. ஹீரோ ஆதியை தவிர வேறு யாரும் என்னை தொடக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நெனச்சேன். ஹீரோ ஹீரோதான், காமெடியன் காமெடியன்தான் என பேசிவிட்டு இதெல்லாம் நகைச்சுவைக்கே என கூறினார். எங்கோ விமானத்தில் செல்ல நேரமானதால் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்,. ஆனால் ரோபோவின் பேச்சுக்கு அங்கிருந்த பத்திரிகையாளர் கண்டனம் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications