கடலில் மூழ்கிய ரோஜா... கலகலக்க வரும் நதியா... பார்க்க நீங்க ரெடியா!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் சக்கைப் போடு போட்டுக்கிட்டு இருக்கு. இதுதான் சன் டிவி தனது சீரியல்களின் ஸ்லாட் நேரத்தை மாத்த பிள்ளையார் சுழி போட்ட சீரியல்னு கூட சொல்லலாம்.
இதுல ரோஜாவா நடிக்கற பிரியங்கா அன்று பூத்த ரோஜா போல எல்லா நாளும் அவ்வளவு அழகு. அர்ஜுனுக்கு மனைவியா நடிக்க வந்த அனாதை பொண்ணு, அந்த வீட்டில் மாமனார், மாமியார், அர்ஜுன், வேலைக்காரி சுமதின்னு எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுட்டாங்க.
அர்ஜுன்-ரோஜா ரொமான்ஸ் படு பிரசித்தி... டெல்லியிலிருந்து இன்னிக்கு வந்த அர்ஜுன் ரோஜாவை கடற்கரைக்கு அழைச்சுட்டு போறான். அங்கு ரோஜா கேட்ட பலூன் வாங்கிக் கொடுத்து, டெல்லியிலிருந்து தான் அவளுக்கு வாங்கி வந்திருந்த மோதிரத்தை பரிசா குடுக்கறான்.

போன்
ரோஜா மகிழ்ந்து கடல் நீரில் விளையாடிட்டு இருக்கா. அந்த நேரத்துல வீட்டிலிருந்து அர்ஜுனுக்கு அம்மாவிடமிருந்து போன் வருது. அம்மா ரோஜா ரொம்ப சந்தோஷமா இருக்காம்மான்னு சொல்றான் அர்ஜுன்.

பீச்சுக்கு
ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னுதான் அர்ஜுன் பீச்சுக்கு அனுப்பி வச்சேன்.. அவ ரொம்ப நல்ல பொண்ணுடா... கல்யாணமாயிருச்சே தவிர ரொம்ப வெகுளி.. அவளை சந்தோஷமா பார்த்துக்கோ அர்ஜுன்னு சொல்லி போனை வைக்கறாங்க.

ரோஜா கடலில்
அர்ஜுன் அம்மாவிடம் பேசிவிட்டு பார்க்கிறான்.. இங்கே ரோஜாவை காணோம். அவள் வைத்து விளையாடிய பலூன் மட்டும் கடல் நீரில் மிதக்கிறது. ரோஜா, ரோஜான்னு அலறுகிறான்... பிரயோஜனமில்லை.

நதியா
திங்கள் முதல் ரோஜா சீரியலில் நதியா வர இருக்காங்க.. இந்த நேரத்துல ரோஜா கடலில் மூழ்கிட்டாளேன்னு தினமும் ரசிச்சு பார்க்கற ஜனங்க அங்கலாய்க்கறாங்க. ஆமா, ரோஜாவுக்கு பதில் நதியாவா, இல்லை நதியா ரோஜாவை காப்பாத்தி அழைச்சுக்கிட்டு சீரியலில் என்ட்ரீயா?












Click it and Unblock the Notifications