ரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...!
சென்னை:சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் எப்போதும் நிறைந்திருக்கும் ஆட்களுடன் கல்யாண வீடு மாதிரி இருக்கிறது.
ஆனா, பிரச்சனைகள் என்னவோ,பரபரன்னு வருது.....வந்த வேகத்துல போகுது . ஜே..ஜே..ன்னு ஆட்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள்.
ராஜாவை கல்யாணம் செய்துக்க ரோஜா போட்ட அத்தனை வேஷங்களும் கலைஞ்சு இப்போ நிலைகுலைஞ்சு கிடக்கா.
மரப்பாச்சி பொம்மை விளையாட்டு மாதிரி.... கதை!
ராஜா சூர்யாவை
அடுத்து ரோஜா பாணியில் ராஜா ரோஜாவின் அக்கா சூர்யாவை கல்யாணம் செய்துக்க பல வேஷங்களை போட்டுக்கிட்டு வர்றான். இவன் நடத்தையில சந்தேகம் வந்துருது கோபியின் தங்கச்சிங்களுக்கு.
தங்கச்சிகள் ஸ்வேதா
அனுசூயா, சவீதா, ஸ்வேதா..சூர்யா எல்லாரும் சேர்ந்து ராஜாவை மிரட்டிப் பார்க்க முடிவு செய்து, அவனை கொஞ்ச நேரம் கலாய்ச்சு மிரள வைக்கலாம்னு முடிவு எடுக்கறாங்க.
ஆண் குரலில் சவீதா
சவீதா ஆண் குரலில் பேச ராஜாவுக்கு போன் போடறா...கான்ஃப்ரன்ஸ் காலில், ராஜா செய்த அட்டூழியங்களைப் பார்த்த சாட்சியாகவும், சூர்யாவுக்கும், கோபிக்கும் கல்யாணம் ஆயிருச்சுடான்னும் சொல்ல மிரண்டு போயி நிஜமாவா சொல்றீங்கன்னு கேட்கறான் ராஜா,
அறிவில்லை உனக்கு
லூசு பயலே அறிவில்லை உனக்கு...சூர்யாகிட்ட தனியா பேசினப்போ அவ உன்கிட்ட இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொன்னாளா இல்லையாடான்னு கேட்க...ஆமாம்னு சொல்றான்.
அப்புறம் என்னடா?
இன்னும் என்னடா உனக்கு தெரியணும்...அவதான் ஓபனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டாளே...ரிஜிஸ்டர் கல்யாணம்டா ம டையான்னு சொல்றா...
ராஜாவுக்கு விறுவிறுத்து போகுது....