Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஜிக்கல் பாண்ட்..மகன் புகைப்படத்தை பதிவிட்ட ரோஜா ஹீரோ சிபு சூர்யன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான மேஜிக் பந்தம் என்று தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன். அந்த போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் எப்படியாவது இடம் பிடித்து விடும்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ரோஜா அர்ஜூன்

ரோஜா அர்ஜூன்


சீரியலில் ரோஜா கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். ரோஜாவிற்கு பழைய சம்பவங்கள் மறந்து விட்டது. மனைவிக்காக ஏங்கி தவிக்கிறார் அர்ஜூன்.
அர்ஜூனாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன் சீரியலை விட்டு கிளம்புகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு அந்த முடிவை கடைசியில் ரசிகர்களுக்காக மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிபு சூர்யன்

சிபு சூர்யன்

சிபு சூர்யன், பிரியங்கா இருவருமே தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளனர். சிபு சூர்யன், அர்ஜூன் ரோலுக்காக 2 முறை சன் டிவி விருதையும் கைப்பற்றியுள்ளார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பலரும் சிபுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். ஆனால் மகனின் புகைப்படத்தை சிபு சூர்யன் வெளியிடவில்லை.

 மகனின் புகைப்படம்

மகனின் புகைப்படம்

இந்நிலையில் முதன்முறையாக தனது மகனின் கைவிரலை பிடித்திருக்குபடியான புகைப்படத்தை சிபு சூர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இத்துடன் " நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட்" என்ற கேப்ஷனையும் சிபு சூர்யன் பதிவு செய்துள்ளார்.

கலக்கல் ஹீரோ

கலக்கல் ஹீரோ

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சிபுசூர்யன். ரோஜா சீரியலுக்குப் பிறகு தான் எந்த புது சீரியலில் நடிக்க மாட்டேன் என அவர் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி அவர் சினிமாவில்தான் கவனம் செலுத்தப் போகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+