Roja Serial: இப்படியேத்தான் இருப்பாங்களா அன்னபூரணி அம்மா?
சென்னை: எப்போ பார்த்தாலும் என்ன குலமோ கோத்திரமோன்னு ரோஜாவை கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்காங்களே.. இப்படியேத்தான் இருப்பாங்களா அன்னப்பூரணி அம்மா?
சன் டிவியில் மாலை 7 : 00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜாவை அனாதை பெண் என்று கூடப் பார்க்காமல் எப்போதும் குலம் கோத்திரம் தெரியாத பெண் என்று சொல்வது...
பெத்தவ யாரோ என்ன கோத்திரமோ என்று சொல்வது இதெல்லாம் பெரியவங்களுக்கு அழகா என்றெல்லாம் தெரியவில்லை.
அன்னபூரணி வடிவுக்கரசி
வடிவுக்கரசி அன்னப்பூரணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்னதான் இருந்தாலும் அவரின் கண்டிப்பான நடிப்பு பாராட்டத்தான் வைக்கிறது. இருந்தாலும் அனாதை பெண் ரோஜா என்று தெரிந்துமா இப்படி எப்போதும் அந்த பெண்ணை கரிச்சு கொட்டிக்கிட்டு இருப்பாங்க வீட்டு பெரியவங்க?
வீட்டு மருமகளை
வீட்டு மருமகள் பேரனின் மனைவி என்றாலும் உரிமையோடு அல்லாமல் அனாதை பெண் என்கிற அருவெறுப்பில் அவளை கை நீட்டி வீட்டு பெரிய மனுஷி அடிக்கடி அடிப்பது... சுடு சொற்களால் பேசுவது என்பதெல்லாம் கதைக்கு என்றால் கூட ஓவராகத்தான் இருக்கிறது.
லதா நதியா
ரோஜா சீரியல் நல்ல ரேட்டிங்கில் இருந்த போது நதியா வந்து இன்னும் ரேட்டிங்கை உயர்த்தினார். அதே ரேட்டிங்கில் இருந்தபோது லதா வந்து நடித்தார். இப்போது ரோஜா சொல்லிக் கொள்ளும்படி ரேட்டிங்கில் இல்லை. ஆனால், ஸ்டார் காஸ்ட் இல்லை.
காணாமல் போனார்
லதா நடித்துவிட்டு போன கையோடு வடிவுக்கரசியும் சிறிது நாட்கள் சீரியலில் காணாமல் போயியிருந்தார். பாட்டி ஊருக்கு போயிருக்கார்.. கோயிலுக்கு போயிருக்கார்னு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். காமாட்சி அதாவது லதாவுடன் என்னை வம்புக்கு இழுத்து பேசி சண்டை மூட்டி ஊருக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள் என்று சொல்லியபடி அண்மையில் வந்து இருக்கார் வடிவுக்கரசி.