"நான் ரொம்ப ரேர்".. என்னடா வசனமே புரியலை.. வசனமாடா முக்கியம்.. படத்தைப் பாருடா!
சென்னை: நான் யாரு மாதிரியும் இல்லை வேறு மாதிரி எனக்கு மேலாடை தேவை இல்லை என்ற ரொம்ப ராவாக ஒரு படம் போட்டு வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
பேன்டேஜ் போடும் துணி போல ஒன்று.. அதை எடுத்து மறைக்க வேண்டியதை மறைத்து.. அதைக் கூட சரியாக பண்ணலை.. ஒரு போட்டோ போட்டுள்ளார்.
வூஹான் மையத்தில் தோன்றிய கொரோனா.. சீனா பெரிய பொய் சொல்லியுள்ளது.. உலக சுகாதார மைய ஆலோசகர் பகீர்
கழுத்தை சுற்றி மறைக்க வேண்டியதை முழுசாக காட்டிய சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனாவின் ஆதிக்கம்
கொரோனாவின் ஆதிக்கம் ஒருபுறம் மனிதர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பலருக்கும் என்டர்டைமெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகமாக வலம் வருவது சாக்ஷி அகர்வால் தான் .அதுவும் போட்டோ ஷூட் நடத்துகிறேன் என்கிற பெயரில் இவர் கண்டமேனிக்கு கன்னாபின்னாவென போட்டோஸ் எடுத்துக்குவிக்கிறார்.
வேற மாதிரி
ஒரு மாடலாக இருந்தாலும் நான் யாரை மாதிரியும் இருக்க மாட்டேன் எனக்கு நிகர் நான்தான் என வித்தியாசமாக போட்டோஸ் எடுப்பதில் கில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் நடிகைகள் பலருக்கும் பிடித்திருக்கும் போட்டோ ஷூட் மோகத்திற்கு முதல் முதல் காரணமாக இவர் தான் விளங்கி இருக்கிறார் .
கலக்கும் போட்டோஸ்
இவர் மாடலாக இருப்பதால் அதற்காக எடுக்கும் போட்டோக்களை முதலில் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் .இவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து தான் பலரும் இவருக்கு போட்டியாக விதவிதமாக போட்டோஸ்களை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர் .ஆனால் தற்போது வரைக்கும் இவருடைய இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை.
செம கூட்டம்
அந்த அளவிற்கு இளைஞர்களை வசியப்படுத்தி வரும் இவர் நெட்டிசன்கள் பிடித்த நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் இவரை வைத்து கலாய்த்து ட்ரோல் பண்ணி பலர் வீடியோஸ் போட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களும் இவரால் வைரலாக பரவி வருகிறது. இவர் இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய நடிப்பு ஆசையினால் அந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார்.
மாடலிங்கில் ஆர்வம்
மாடலிங்கில் இவர் சூர்யாவுடன் துணிக்கடை முதல் நகைக்கடை வரை பல விளம்பரங்களிலும் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். அதற்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பிக்பாஸ் மூலமாக ரசிகர்களிடம் இவருக்கு ஒரு பிளாட்பாரம் கிடைத்து இருந்தது .அதனால் இவருக்காக ரசிகர்களும் உருவாக்கினர் .
முன்பு டிக்டாக்கில் பிசி
ஆனால் இவர் இந்த வீட்டை விட்டு 49 வது நாள் வெளியேறி விட்டதால் அதற்குப் பிறகு டிக்டாக்கில் கொடிகட்டி பறந்து வந்தார் .தன்னுடைய நடிப்புத் திறமையையுடன் ஆட்டம் போட்டு வந்த இவர் அடுத்ததாக உடற்பயிற்சியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார் .தன்னை மாதிரி தன்னுடைய ரசிகர்களும் மாறவேண்டும் என மார்னிங் வீடியோஸ் அதிகமாக போட்டு வந்தார்.
ஜிம் கும்
அவருடைய வீடியோக்களில் உடற்பயிற்சி செய்யும்போது ஜும் உடையில் வந்து பலரையும் சிலிர்க்க வைத்து இவரைப பலரும் ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டனர். தற்போது ஊரடங்கு நேரத்தில் இவருக்கு சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் முழுநேரமாக போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் தற்போது தன்னுடைய சகோதரியின் அலங்காரத்துடன் இவர் வேற லெவல் ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் .
அடடா போட்டோ
ஒயிட் கலர் பேண்ட் மட்டும் போட்டுக்கொண்டு மேலாடை எதுவும் போடாமல் கழுத்தை சுற்றி துணியை கட்டிக்கொண்டு கலக்கலாக பார்க்கும் பார்வையை பார்த்ததும் பல பேருக்கு எப்படி வர்ணிக்க என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் இதை உங்கள் கணவரிடம் மட்டும்தானே காட்டவேண்டும் ரசிகர்கள் எல்லாம் பார்த்தால் அவருக்கு எதை காட்டுவீர்கள் என பீல் பண்ணி வருகின்றனர்.