அழகம்மை குடும்பம் சகுந்தலா தேவியின் கையில.. என்ன பண்ண முடியும்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் நடிகை ரேவதி கொஞ்சம் கூட அலட்டல் இலலாமல் ரொம்ப இயல்பா நடிக்கறாங்க..
குடும்பத்துல மாமியாரா,அம்மாவா,மனைவியா எப்படி இருக்கணும்ன்ற ரோல்மாடலாவே அழைக்கம்மையை எடுத்துக்கலாம்.அவ்வளவு நல்ல ரோல் பிளே பண்றாங்க ரேவதி.

அழகம்மையின் மகள் காவ்யா, தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் மகன்தான் மதன்னு காதலுக்கு சம்மதம் தெரிவிப்பது போல தெரிவிச்சு, தந்திரமா கல்யாணத்தையே நிறுத்திடறாங்க சகுந்தலா தேவி.
மதனுக்கு காவ்யா மேல வெறுப்பு வர்ற அளவுக்கு தந்திரம் செய்யறாங்க சகுந்தலா தேவி. இப்போ தான் விருப்பப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் நடந்து, பத்திரிகை கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கு.

முதல் பத்திரிகையை காவ்யாவுக்குத்தான் கொடுக்கணும்னு வரும்கால மனைவியோட.மதன் காவ்யா வீட்டுக்கு வர்றான்.முதல் பத்திரிகையை உனக்குத்தான் கொடுக்கணும்னு வந்தேன் காவ்யா.
நீ ஒ ரு ஆம்பளையா..உன்னை எவ கல்யாணம் பண்ணிக்கறான்னு பார்க்கறேன்னு சொன்னே இல்ல காவ்யா. பாரு இப்போ எனக்கு கல்யாணம் நடக்கப் போவுது.கல்யாணத்துக்கு வந்து கை நனைக்கிறியோ இல்லையோ. கண்ணை நனைச்சுட்டு போன்னு சொல்றான் மதன்.

இதுல ஏற்கனவே, கண்ணீரை தாரை தாரையாக விட்டுகிட்டு,நிற்கும் காவ்யாவுக்கு கோவம் வந்துருது. பத்திரிகையை தட்டிவிட்டு போயிடறா. அழகம்மை, இப்போத்தான் காவ்யாவை சமாதானப்படுத்தி நல்லபடியா வச்சிருக்கோம்... ஏன்பா இப்படி செய்யறீங்கன்னு அழறாங்க.
காவ்யா..ஒரு ஏமாற்றத்துல நீ ஒரு ஆம்பிளையான்னு கேட்டேன்..இது கூட புரியாமலாடா என்னை காதலிச்சே..என் காதல் உண்மையானது..என்னை உன்னோட சேர்த்து வைக்கும்னு அழறா காவ்யா.
இதே சகுந்தலா தேவியின் மகள் அழைக்கம்மையின் மருமகள் பூர்ணான்னு தெரிஞ்சு போச்சு. இப்போ, இவளும் அழகம்மையின் மகன் மகேஷை விவாகரத்து செய்ய, நோட்டீஸ் அனுப்பறா.இதனால மகேஷுஅழுதுகிட்டு இருக்கான்.
இப்போ சகுந்தலா தேவி கையில அழகம்மை குடும்பம் மாட்டிகிட்டு தவிக்குது.. என்ன பண்ண..ஒண்ணும் பண்ணமுடியாது.












Click it and Unblock the Notifications