அகால மரணம் அடைந்த நடிகை சனம் ஷெட்டியின் சகோதரர்.. உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் ஆறுதல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சனம் ஷெட்டியின் சகோதரர் விபத்தில் உயிரிழந்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். அதோடு தன்னுடைய சகோதரர் பற்றிய பல நினைவுகளையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடுகிறார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக திடீரென அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் அப்போது கூட ரசிகர்கள் இது அன்ஃபேர் எவிக்ஷன் என்று கூறி இருக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகை சனம் ஷெட்டி. சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அழகி போட்டியில் வெற்றி
அதற்கு முன்பு கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்திய அழகி போட்டியில் டைட்டில் வெற்றி பெற்று இருந்தார். மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அம்புலி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகி ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
வெற்றி கிடைக்கவில்லை
இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து போட்டி போட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஜனநாயகம் திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி உதவி இயக்குனர் ஒருவர் கடைசி வரைக்கும் வாய்ப்பே தராமல் ஏமாற்றி விட்டார் என்று வருத்தமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார்.
நடிகை சனம் ஷெட்டி சகோதரர் மரணம்
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை பகிர்ந்திருக்கிறார். அதில் தன்னுடைய இளைய சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார். அந்த பதிவில், "இது நானும் அப்பாவும் மீள முடியாத ஒரு இழப்பு. இதனை எப்போதும் எப்படியும் நியாயப்படுத்த முடியாது. என் அன்பான சகோதரர் ராகுல் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உனை இழப்போம். நீ இருக்கும் இடத்திலாவது அமைதியாகவும் சந்தோசமாகவும் இரு.
ரசிகர்கள் ஆறுதல்
நீ எங்களுடன் செலவிட்ட விலை மதிப்பில்லாத நேரத்திற்கும் உனது அன்பான இதயத்திற்கும் நன்றி. ஒருபோதும் விடை பெற முடியாது, விரைவில் உன்னை சந்திப்போம்" என்று அந்த பதிவை சோகமாக வெளியிட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய தம்பியோடு எடுத்த சில புகைப்படங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். சனம் ஷெட்டி எப்போதும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கொண்டிருப்பார். இப்போது சோகத்தில் அவர் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications