பெற்றோர் துணையின்றி சரிகமபவிற்கு வந்த 14 வயசு பொண்ணு.. சைந்தவி செய்த செயல்! இப்படியும் மனுஷங்க இருக்கிறாங்க!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு கன்னியாகுமரியிலிருந்து 14 வயது பொண்ணு பெற்றோர் துணை இன்றி தனியாக வந்திருக்கிறார். அந்த பெண் குழந்தைக்காக சைந்தவி செய்த செயல்தான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அதோடு அந்த குழந்தையின் குடும்ப சூழ்நிலை கேட்டு அனைவருமே பீல் பண்ணி வருகின்றனர்.
சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஜூனியர்களுக்கான சீசன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில குழந்தைகளை மட்டும் தான் செலக்ட் செய்து இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் கன்னியாகுமரி மித்ரா. கன்னியாகுமரியை சார்ந்த மித்ராவிற்கு 14 வயது தான் ஆகிறது. இந்த குழந்தை பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே பாடல் திறமையும் இருந்திருக்கிறது. ஆனால் இவரை சரிகமப ஆடிஷனுக்கு கூட்டிட்டு வருவதற்கு யாரும் இல்லையாம். இதனால் தனியாகவே இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பாடும் போட்டியாளர்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மேடைக்கு வந்தனர். அப்போது மித்ரா மட்டும் யாரும் இல்லாமல் தனியாக வந்து நிற்க, அவரிடம் பாடகி சைந்தவி நீங்க யாரையும் கூட்டிட்டு வரலையா மித்ரா என்று கேட்கிறார். அதற்கு மித்ரா அப்பா அம்மாவால ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வர முடியாது என்று சொன்னதும், அப்படியா அப்போ நான் உங்களுக்கு துணையா அந்த இடத்துக்கு வாரேன் என்று மேடைக்கு வந்த சைந்தவி மித்ராவை கட்டிப்பிடித்து தைரியம் கொடுத்தார்.
ரொம்ப பயத்தோடு இருக்க. பதட்டத்தை விட்டுட்டு நார்மல் ஆகி பாடு உனக்கு ஒரு அக்காவா நான் இருக்கிறேன் என்று மீண்டும் சைந்தவி தைரியம் சொல்லி இருந்தார். பிறகு மித்ரா "மரிக்கொழுந்தே.. மல்லிகை பூவே" என்ற பாடலை பாடினார். அவர் பாடியதை கேட்டு பாராட்டி அவரை செலக்ட் செய்து விட்டனர். பிறகு எதற்காக உங்க அப்பா அம்மா வரல என்று நடுவராக இருக்கும் ஸ்வேதா கேட்டார்.
அப்போதுதான் தன்னுடைய சோகக் கதையை சொல்லி மித்ரா அனைவரையும் அழ வைத்துவிட்டார். அதாவது மித்ராவின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார். பிறகு சில மாதங்களிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாம். ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி பார்க்கும் போது தான் அவருக்கு கிட்னியில் 80 சதவீதம் செயலிழந்து போய்விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

பிறகு மித்ராவின் அம்மா தான் தன்னுடைய கணவருக்காக ஒரு கிட்னியை கொடுத்திருக்கிறார். அதுவும் மித்ராவின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்து கிட்னி எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது அவருக்கும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. அவரால் வேகமாக பேச முடியாதாம், சிரிக்க முடியாதாம், தும்ம கூட முடியாது என்று மித்ரா கலங்கியபடி சொல்லி இருக்கிறார். பெற்றோர் இருவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க தான் செலக்ட் ஆனதை கூட ஷேர் பண்ண யாரும் இல்லாமல் அந்த மேடையில் மித்ரா தனியாக அழுது கொண்டிருந்தார்.
அவருக்கு சைந்தவி தான் ஆறுதலாக பேசினார். உனக்கு ஒரு அக்காவாக இந்த நிகழ்ச்சியின் கடைசி வரைக்கும் நான் இருப்பேன். அப்பா அம்மாவிடம் சொல்லிவிடு எனக்குன்னு ஒரு அக்கா இருக்காங்க, அவங்க பாத்துக்குவாங்கன்னு சொல்லு. உனக்கு என்ன வேணுமோ எல்லாவற்றையும் நானே வாங்கி தருவேன். என்கிட்ட நீ எதனாலும் ஷேர் பண்ணிக்கலாம் என்று சொல்லி இருந்தார்.
பிறகு நடுவராக இருக்கும் கங்கை அமரன், ஸ்வேதா மற்றும் ஸ்ரீநிவாஸ் உட்பட எல்லோரும் சேர்ந்து நாங்கள் உனக்கு துணையாக இருப்போம் அதுபோல உன்னுடைய பெற்றோருக்கு தேவையான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த காட்சி பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறது. அதோடு இந்த குழந்தையின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடந்து அவருடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications