சரிகமபா நாகார்ஜுனாவின் பல வருட காதல் வாழ்க்கையில் சோதனை.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
சென்னை: ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நாகார்ஜுனா தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பல வருடங்களாக தான் காதலித்து வந்த பெண் கடைசி நேரத்தில் சொன்ன வார்த்தையும், பிறகு அந்தப் பெண்ணால் தனக்கு கிடைத்த அதிர்ச்சியை பற்றி நாகார்ஜுனா பேசியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் சோக கதையை கேட்டு சரிகமபா நடுவர்கள் வயிறு வலிக்க சிரித்திருக்கின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சியின் மூலமாக பல பாடகர்கள் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது ராமநாதபுரத்தை சார்ந்த பாடகர் நாகார்ஜுனாவும் இடம் பிடித்திருக்கிறார். இவர் ஒரு மீனவ குடும்பத்தை சார்ந்தவர். மீன் பிடிக்கப் போகும்போது கேட்ட பாடல்களை வைத்து அவராகவே பாடி, எந்த ஒரு பயிற்சியும் இல்லாமலே இந்த நிகழ்ச்சியில் பல பேருடைய மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..! 7 பீரோ புடவை வைத்திருக்கும் பெண் உருக்கம்
சரிகமபா நிகழ்ச்சிக்கு பலரும் பலவிதமான உடைகளில் வந்து அசத்தியிருந்தாலும் நான் எப்போதும் தனித்துவம் என்று சொல்கின்ற மாதிரி நாகார்ஜுனா லுங்கியோடு வந்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார். தன்னுடைய ஏழ்மையிலும் விடாமுயற்சியால் இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கும் நாகார்ஜுனா தன்னுடைய காதல் கதையை குறித்து சரிகமபா மேடையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது.
அதில் வழக்கம் போல நாகார்ஜுனா பாட்டு பாடி முடித்ததும் நடுவர்கள் இந்த அளவிற்கு காதல் பெயிலியர் ஆன பாடலை நீ பாடியிருக்க என்றால் உண்மையில் உனக்கு லவ் ஃபெயிலியர் ஆகி இருக்கிறதா? என்று கேட்க வேண்டாம் சார். இதை அந்த பொண்ணு பாத்தா தப்பாயிடும். அந்த பொண்ணுக்கு கெட்ட பெயர் ஆயிடும் என்று நாகார்ஜுனா வெட்கப்பட அப்படியே தொகுப்பாளர் அர்ச்சனா அப்படி என்றால் கேமராவை எல்லாம் ஆப் செய்து விடலாம். நீ உன்னுடைய கதையை சொல்லு என்று நாகார்ஜுனாவை தூண்டி விடுகிறார்.
ஆரம்பத்தில் எப்படி எப்படி எல்லாமோ சமாளித்து பின்பு அந்த கதையை ஏன் சார் கேக்குறீங்க ஒரு பொண்ணை 3 வருஷமா நானும் உருகி உருகி காதலிச்சேன். அந்த பொண்ணு எனக்கு 7:45 க்கு போன் பண்ணி நான் எட்டு மணிக்குள்ள உன் பொண்டாட்டியா ஆகணும் இல்லனா நடக்கிறது வேறன்னு சொல்லிட்டாராம். அதைக் கேட்டு நாகர்ஜுனா ஜெர்க் ஆகி இருக்கிறார்.
பிறகு எட்டு மணிக்குள் நீ வந்து எனக்கு தாலி கட்ட வேண்டும் என்று கூறினாராம். அப்போ நாகர்ஜுனாவின் சகோதரிகளுக்கும் திருமணம் ஆகாமல் இருந்திருக்கிறது. அதனால் முடியாது என்று சொல்ல, நான் வேண்டுமா? உன்னுடைய குடும்பம் வேண்டுமா? என்று அந்தப் பெண் கேட்டாராம். அதற்கு நாகர்ஜுனா என்னுடைய குடும்பம் தான் வேண்டும் என்று கூறினாராம். உடனே அந்த அந்தப் பொண்ணு போனை வைத்து விட்டாராம்.
அடுத்த நாள் இவரும் வழக்கம் போல கடலுக்கு போயிட்டு திரும்பி வந்திருக்கிறார். அப்போ தான் தெரிஞ்சதாம் அந்த பொண்ணு அவரோட மச்சான் கூட ஓடிப் போயிட்டான்னு. நான் எட்டு மணிக்கு போகலன்னு சொன்னதும் எட்டு மணிக்கு அவங்க மச்சான கல்யாணம் பண்ணி இருக்கு என்று சொல்ல, இந்த கதையை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்து இருக்கின்றனர்.
இதுவரைக்கும் நாகார்ஜுனா பாடிய பாடல்கள் தான் வேற லெவலில் வைரல் ஆகி வரும் நிலையில், தற்போது நாகார்ஜுனாவின் காதல் கதையும் வைரல் ஆகி வருகிறது. இந்த காதல் டிராப் ஆகி மூன்று வருடம் ஆனாலும் நாகர்ஜுனா அதற்குப் பிறகு யாரையும் காதலிக்காமலும் திருமணம் செய்யாமல் தான் இருந்து வருகிறாராம்.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications