Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டுனு காலில் விழுந்த தந்தை.. உடைந்து போன மகளின் கற்பனைகள்.. கண்கலங்கிய பாடகி சைந்தவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டு இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதில் ஸ்வேதா தன்னுடைய தந்தையிடம் கொடுத்த கடிதத்தால் அரங்கில் இருந்த ஒட்டு மொத்த நபர்களும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். எல்லோரும் அழும் அளவிற்கு என்ன நடந்தது? அந்த கடிதத்தில் என்னதான் எழுதி இருந்தது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜீ தமிழில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பகுதிகளாக ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரிகமப ஜூனியர் நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து சரிகமப சீனியர் சீசன் 4 நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் இந்த வாரத்தில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றிருக்கிறது.

Television Zee Tamil sarigamapa Season 4 Show Entertainment 4

அதில் போட்டியாளர் ஸ்வேதா முதல் முறையாக தனக்காக இந்த மேடைக்கு வந்த தன்னுடைய தந்தையிடம் இந்த கடிதம் என்னுடைய அப்பாவிற்கு நான் என்னுடைய மனதில் இருந்து அவரிடம் பேச நினைப்பதை இந்த கடிதத்தில் எழுதி இருக்கிறேன் என்று கடிதத்தை எழுதி கொடுத்து இருக்கிறார். அதை அவருடைய தந்தை மைக்கில் மேடையில் படிக்கிறார். அதில், அன்புள்ள அப்பாவிற்கு உங்கள் ஆசை மகள் எழுதும் முதல் கடிதம்.

அப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்குமா என்று இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியாது என்ற வார்த்தையை படிக்கும்போதே அவர் கண்கலங்கி அழுது விடுகிறார். மறு வார்த்தை பேச முடியாமல் சில நிமிடங்கள் தயங்கி நின்று உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதை இன்னைக்கு வரைக்கும் உன்னிடம் காட்டுனது கிடையாது என்று அழுது கொண்டே சொல்ல,

Television Zee Tamil sarigamapa Season 4 Show Entertainment 4

ஸ்வேதா இப்ப வரைக்கும் அவருக்கு என் மேல பாசம் இருக்கா? இல்லையா? என்று கேள்வி வந்து கொண்டே இருக்கிறது. அவர் என் மேல பாசமா இருக்கணும்னு ஏக்கமா இருக்கு. ஒரே ஒருமுறை உங்களை கட்டிப்பிடித்து உங்ககிட்ட முத்தம் வாங்கணும் என்று சொல்லும் போதே அவருடைய தந்தை ஸ்வேதாவின் காலில் டக்கென்று விழுந்து விட, இதை எதிர்பார்க்காத எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதோடு இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்த எல்லோரும் கண்கலங்கி அழுது கொண்டிருக்கின்றனர். நடுவராக அமர்ந்திருக்கும் சைந்தவி இதை சற்றும் எதிர்பார்க்காமல் தந்தை மகளின் பாசத்தை பார்த்து கண்கலங்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய அர்ச்சனா ப்ளீஸ் எங்களுடைய உலகத்தில் மிகப்பெரிய பாராட்டு தந்தைகள் நீங்க கொடுக்கிற பாராட்டு தான் என்று சொல்லி இருக்கிறார்.

பொதுவாக பல வீடுகளில் தந்தைகளுக்கு பெண் குழந்தைகள் தான் ரொம்பவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சில வீட்டில் தந்தைகள் தன்னுடைய பாசத்தை பெண் குழந்தைகள் மீது காட்டாமல் அதை மறைத்து வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இப்போது சரிகமப நிகழ்ச்சியிலும் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+