Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடைந்த சரோஜாதேவி.. என் மகனை ஆசீர்வதித்தாங்க.. முத்தமிழில் இல்லாதது சரோஜா தேவி தமிழ்: ரமேஷ் கண்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்றைய காலகட்டத்தில் அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது... நடிகை சரோஜா தேவி தமிழில் நீண்ட காலம் நடித்த படம் ஆதவன் ஆகும்.. அதுமட்டுமல்ல, இதுவே அவர் கடைசியாக நடித்த படமும் ஆகும்.. இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை நடிகர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார்.. இந்நிலையில், நம்முடைய ஒன் இந்தியா வாசகர்களுக்காக, ரமேஷ் கண்ணா தந்த சிறப்பு பேட்டியில், சரோஜா தேவியை நினைவுகூர்ந்துள்ளார்.

ரமேஷ் கண்ணா நம்மிடம் கூறும்போது, "சின்ன வயசிலிருந்தே நான் சரோஜா தேவியின் தீவிர ரசிகன்.. அந்த காலத்திலிருந்தே அவருக்கு நான் ரசிகன்..

Television saroja devi ramesh kanna

சூப்பர் ஸ்டார்கள்

பல்வேறு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்.. தெலுங்கில் என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்றோருடனும், கன்னடத்தில் ராஜ்குமார், கல்யாண்குமார் போன்றோருடனும், தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்றோருடனும் என 3 மாநில டாப் ஸ்டார்களுடன் இணைந்து, நடித்த பெருமைக்குரியவர்.

சரோஜா தேவி ஒரு மிகப்பெரிய லெஜண்ட்.. அவருடன் ஆதவன் படத்தில் பணிபுரிந்தது என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.. கடந்த 2010-ல் ஆதவன் படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டு, அதிலுள்ள கேரக்டரில் சரோஜா தேவி நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரிடம் சொன்னேன்.

இளையமான் கேரக்டர்

அவரும் சரோஜா தேவியின் தீவிர ஃபேன் என்பதால், உடனே ஓகே சொன்னார்.. பிறகு, சரோஜாதேவியிடம் ஆதவன் படத்திற்கான கதையை சொல்லி சம்மதம் பெற்றாகிவிட்டது. ஷூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது.

ஆனால், திடீரென நான் செய்ய வேண்டியிருந்த காமெடிக்கு வடிவேலுவை புக் செய்துவிட்டார்... இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த நான், எப்படியாவது சரோஜாதேவியுடன் நடித்தாக வேண்டும் என்பதற்காக, இளையமான் என்ற கேரக்டரை இதற்காகவே உருவாக்கினேன்.. அந்த கேரக்டருக்கும், அந்த படத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்றாலும், சின்ன கேரக்டரை உருவாக்கி நடிக்க காரணமே சரோஜா தேவி அம்மாவுடன் நடித்தாக வேண்டும் என்ற லட்சியம்தான். .

அன்று வந்ததும் அதே நிலா என்று எம்ஜிஆருக்கு பிறகு, நான்தான் பாடி ஆடி நடித்திருப்பேன் போல.. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, என்கூட நல்லா பேசுவாங்க.. ரொம்ப ஃபிரண்டாயிட்டாங்க..

அக்கம் பக்கம் பார்க்காதே

எம்ஜிஆருடன் நடித்த அனுபவங்களை சொல்வார்.. அக்கம் பக்கம் பார்க்காதே என்ற பாட்டில் சைக்கிள் ஓட்டிக் கொண்டே பாடுவார்.. அதில், அக்கம், பக்கம் என்ற வார்த்தைகளுக்கேற்ப இரு பக்கமும் பார்த்து சைக்கிள் ஓட்டுவார்..

"அந்த பாட்டில் நிஜமாகவே எம்ஜிஆர்தான் உங்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்று தந்தாரா?" என்று கேட்டேன்.. அதற்கு சரோஜாதேவி, "எனக்கு சின்ன வயசுலேயே சைக்கிள் ஓட்ட தெரியும்.. சைக்கிள் ஓட்ட தெரியாத மாதிரி நடித்தேன் " என்றார்.. அந்த அளவுக்கு பிரம்மாதமாக நடித்திருப்பார்.

மகனின் திருமணம்

இதற்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு என்னுடைய 2 வது மகனுக்கு திருமணம் வைத்திருந்தேன்.. இதற்காக கல்யாண பத்திரிகை தந்து அழைப்பிதழும் அவருக்கு தந்தேன்.

இதற்கெல்லாம் பெங்களூரிலிருந்து வரமாட்டார் என்றே நினைத்தேன்.. ஆனால், என் மகன் திருமணத்தில் கலந்துகொண்டது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது..

என்னுடைய சம்பந்தியின் அம்மா பெயரும் சரோஜா தேவிதான் என்று சொன்னதுமே, அதைக்கேட்டு சந்தோஷப்பட்டார்.. அனைவருடனும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.. மணமக்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போனார்.

சரோஜாதேவியின் தமிழே தனித்தமிழ்... "முத்தமிழில் இல்லாத இன்னொரு தமிழ் இருக்கு.. அதுதான் சரோஜா தேவியின் தமிழ் என்றார் டாக்டர் கலைஞர்..அதுதான் உண்மை" என்றார் ரமேஷ் கண்ணா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+