Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sembaruthi Serial: எங்கிட்டு திரும்புனாலும் கேட்டு போடறாய்ங்களே.. இருந்தாலும் விசுவாசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பார்வதிக்கும், ஆதிக்கும் கல்யாணம் நடந்தது அகிலாண்டேஸ்வரிக்கு எப்போது எப்படி தெரிய வருமோ என்று சீரியல் பார்ப்பவர்கள் கவலையாக இருந்தது.

கடைசியில் பார்வதியின் அப்பாவும், அகிலாண்டேஸ்வரியின் கார் டிரைவருமான சுந்தரத்துக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. இதை நான் அம்மாவிடம் சொல்லியே தீருவேன் என்று விரைகிறார்.

நான் அம்மாவின் விசுவாசி... என் விசுவாசத்துக்கு பங்கம் வர விடமாட்டேன். இதை சொல்லியே தீருவேன் என்று முதலாளி அம்மாவின் வீட்டுக்கு வர, அகிலாண்டேஸ்வரியின் கணவரும், ஆதியின் தம்பி ,அதாவது அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மகன் இருவரும் டிரைவர் சுந்தரத்தை சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.

பார்வதியும் பெரிய தம்பியும்

பார்வதியும் பெரிய தம்பியும்

நம்ம வீட்டு பெரிய தம்பியும் பார்வதியும் பழகிகிட்டு இருக்காங்கன்னுதான் நினைச்சேன். அவங்க கல்யாணமே செய்துகிட்டாங்க .இது உங்களுக்குத் தெரிஞ்சுமா பெரியய்யா இன்னும் அம்மாகிட்டே சொல்லமா இருக்கீங்கன்னு முதலாளி அம்மா புருஷன்கிட்டேயே கேட்கிறார் சுந்தரம்.

சுந்தரம் சொல்லாதே

சுந்தரம் சொல்லாதே

சுந்தரம் அம்மாகிட்டே இப்போ சொன்னா என்ன நடக்கும்னே உனக்கு தெரியாது.இப்போதைக்கு சொல்லாதேன்னு சொல்லி எச்சரிக்கறாங்க. அதற்குள் அகிலாண்டேஸ்வரி மாடிப் படியில் கீழே இறங்கி வர்றாங்க. சுந்தரம் சொல்லாதே சொல்லாதே என்று இருவரும் எச்சரிக்க... சொல்லியே தீருவேன்..எனக்கு விசுவாசம்தான் முக்கியம்னு சொல்றார் இவர்.

சுந்தரம் கோயிலுக்கு

சுந்தரம் கோயிலுக்கு

சுந்தரம் கோயிலுக்கு போகத்தான் வர சொன்னேன் போலாமான்னு கேட்கறாங்க.அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்மான்னு சொல்ல, சொல்லு சுந்தரம் என்ன விஷயம்னு கேட்கறாங்க. அதற்குள் வேணும்னே கணவர் வந்து அகிலாண்டேஸ்வரியிடம் பேச, சரி சுந்தரம் டைமாச்சு வண்டியை எடுங்கன்னு சொல்றாங்க.

காரிலாவது சொல்லிடுவேன்

காரிலாவது சொல்லிடுவேன்

சும்மா விட மாட்டேன்...காரில் போறப்போ சொல்லிருவேன்னு சொல்லிட்டு போறார் சுந்தரம். காரிலும் போனில் பேசிக்கொண்டே வர.அந்த போன் வச்சவுடன் அவங்க புருஷன் வேணும்னே காரில் போகும்போது போனில் பேச்சுக் கொடுத்துக்கிட்டு கோயிலுக்கே ஃபாலோ பண்ணிக்கிட்டு போயிடறாங்க.

கோயிலிலும் சொல்ல

கோயிலிலும் சொல்ல

கோயிலில் தியானத்தில் இருக்கும்போது சொல்லலாம் என்று வாயைத் திறந்தால் , அங்கு அகிலாண்டேஸ்வரி அம்மாவின் புருஷனும், இரண்டாவது பையனும் வந்து கேட் போடறாங்க. கோயிலில் நடந்த ஒரு காதல் கல்யாணத்தை எச்சரிச்சுட்டு வீட்டுக்கு வர்றாங்க. அப்புறமா சுந்தரம் நீ முக்கியமா என்னவோ பேசணும்னு சொன்னியே.. இப்போ சொல்லுன்னு சொல்றாங்க. இப்போ யார் கேட்டு போட்டும் நிக்கலை அவர்...அம்மா என் மகள் பார்வதி ஒரு தப்பு பண்ணிட்டாம்மா.. தப்பா என்ன தப்புன்னு இவங்க கேட்க, பார்வதி யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டம்மான்னு இப்போதைக்கு சொல்லிட்டார்.எபிசோட் முடிஞ்சு போச்சு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+