சன் டிவி டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. காரணம் இதுதான்! அவரே வெளியிட்ட விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ஷபானா விலகப் போவதாக திடீரென்று பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் விளக்கி இருக்கிறார்.
ஷபானா முதல் முதலாக தமிழில் செம்பருத்தி என்ற சீரியலில் மூலமாக அறிமுகமாகி இருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான அந்த சீரியலில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். ஆரம்பத்தில் சன் டிவி சீரியலுக்கு டப் கொடுத்து டிஆர்பி முன்னணி இடத்தை பிடித்த சீரியலாக செம்பருத்தி சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் கிடைத்த வெற்றியின் காரணமாகவே அந்த சீரியல் முடிவடைந்ததும் ஷபானாவிற்கு சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலும் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருக்கும் தான் விலகிவிட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். மிஸ்டர் மனைவி சீரியல் 300 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகனாக பவன் ரவீந்தரா நடித்து வருகிறார்.
அதுபோல அனுராதா, ரஞ்சிதம் போன்ற பலரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் இயக்குனர் ஜெ வெங்கடேஷ் வேதநாயகம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பது குறித்து ஷபானா வெளியிட்ட பதிவில், மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றாலும் இந்த சீரியலில் இருந்து இரண்டு முக்கிய காரணத்தால் நான் விலகுறேன்.
இந்த சீரியலில் அஞ்சலி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த கேரக்டர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கேரக்டராக எனக்கு அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் எனது புதிய ப்ராஜெக்ட் காரணமாகவும், புதிய கேரக்டர் காரணமாகவும் நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன். உங்களிடம் இருந்து ஷபானா என்ற அஞ்சலி விடைபெறுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது பொதுவாக சீரியலில் எத்தனையோ கேரக்டர்கள் இவருக்கு பதில் இவர் என்று மாறிக்கொண்டிருந்தாலும் கதாநாயகன் அல்லது கதாநாயகி மாறுவது என்பது யாரும் எதிர்பார்க்காதது. இதுவரைக்கும் ஷபானாவை அஞ்சலியாக பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் இவருடைய இந்த முடிவை கேட்டு வருத்தப்பட்டு கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இனி ஷபானாவிற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications