தத்துவத்தோடு, நல்ல செய்தியை சொன்ன ஷபானா... வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பல நாட்களுக்குப் பிறகு புன்னகையோடு நல்ல செய்தியை கூறியிருக்கும் ஷபானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நாணத்தோடு சிரித்த ஷபானாவை பார்த்து பல ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் உள்ளார்களாம்.
பல நாட்களாக இதைத்தான் தேடிக் கொண்டிருந்தோம் என ரசிகர்கள் ஷபானாவுக்கு ஆறுதல் கொடுத்து வருகிறார்கள்.

ஷபானா கொஞ்சம் வித்தியாசம்தான்
செம்பருத்தி சீரியல் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ஷபானா என்ற பெயரைக் கேட்டதுமே பலருக்கும் பார்வதி தான் ஞாபகத்திற்கு வருவார். பார்வதியாக அனைவரின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துவிட்ட ஷபானாவிற்கு சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் நடித்து அங்கு தனக்கு அங்கீகாரம் இல்லாத வகையில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து வருவதால் ஷபானா அவர்களுக்கு எல்லாம் வித்தியாசமானவர்.

மிரளவைத்த திடீர் திருமணம்
சின்னத்திரையில் ஜீ தமிழ் மூலமாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரை கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ்க்கள் இருந்துவருகிறது. ரசிகர்கள் இவருடைய ஒவ்வொரு க்யூட்டான போட்டோக்களையும் பேன்ஸ் பேஜ்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இவர் திடீரென்று காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தது.

மகிழ்ச்சியான செய்தி
ஆனால் சமீப காலமாக இவருடைய திருமண வாழ்க்கையை பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் எது உண்மை எது பொய் என்று தெரியாத ரசிகர்கள் பலர் ஷபானாவை டேக் செய்து தங்களது சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எந்த ஒரு பதிலும் கூறாமல் தற்போது சமூக வலைத்தளத்தில் ஷபானா ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதை பார்த்ததும் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் ஓபன் செய்து பார்த்த போது அது தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் அடைந்திருக்கும் வெற்றியை பற்றியதாக உள்ளது.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சீரியல்களை போலவே சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாகவும் அதிகமான ரசிகர்களோடு இருக்கும் ஷபானா தற்போது 800 கே ஃபாலோவர்ஸ் பெற்றுள்ளார். அதனைக் கொண்டாடும் வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் ஒரு சிறிய புன்னகை, ஒரு சிறிய மகிழ்ச்சி, வெறும் நிலவு ஒரு சிறிய துண்டு, கனவுகளில் வைக்கோல்களுடன், ஒரு வீட்டில் நாம் இப்போது 800 கே வாக வலுவாக இருக்கிறோம், என்று தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு சிரித்த முகமாக சமூகவலைத்தளத்தில் ஷபானாவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications