அள்ளி முடிக்காத கொண்டையும் .. அரைகுறை ஆடையும் .. அதிர வைத்த ஷிவானி
சென்னை: சிங்கம் களத்தில் மீண்டும் இறங்கியது போல கலக்கலான போட்டோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டார் ஷிவானி .
ரசிகர்கள் பார்த்ததும் ஜொள்ளு விடுகிறார்கள்.. ஹேட்டர்கள் பார்த்துப் பார்த்து ஜெலுசில் குடிக்கிறார்களாம்.
பார்த்துப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் கவிதைகளை பொழிந்து வருகின்றனர். நீலவண்ண உடையில் பகல் நிலவு வந்துவிட்டது என்றும் ஜொள்ளி மகிழ்கிறார்கள்.
மச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்!
பகல் நிலவு சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சீரியலில் காலடி எடுத்து வைத்திருந்த ஷிவானி இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டு மூலமாக ரொம்பவே பாப்புலராகி விட்டார் .இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்னரே டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருந்து ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனது வசப்படுத்தி வைத்திருந்தார் .
வாய்ப்பு
இதில் இவருடைய ரசிகர்களையும் இவருடைய அழகையும் பார்த்து தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தன்னுடைய திறமையை காட்டி இருந்தார் .ஆனால் பகல் நிலவு சீரியலுக்கு பிறகு இவருக்கு இரட்டை ரோஜா சீரியலில் இரணடு கேரக்டரில் கலக்கிக் கொண்டிருந்தார்.
சீரியலிலிருந்து விலகல்
ஆனால் இவருக்கு சீரியலில் நடிப்பது தனது திறமைக்கு சரியில்லை என இவர் சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்தார் .முதலில் இந்த நிகழ்ச்சிக்கு இவர் போகிறார் என்று சொன்னதுமே இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியாகி பிக்பாஸ்க்கும் செல்ல வேண்டாமென இவரிடம் எவ்வளவு கெஞ்சி இருந்தனர். ஆனால் அவர் அதையெல்லாம் அசால்டாக தள்ளிவிட்டு இந்த வீட்டிற்குள் சென்றுவிட்டார் .
போன பிறகும் போட்டோக்கள்
ஆனால் செல்வதற்கு முன்பு கூட ரசிகர்கள் உங்களை பார்க்காமல் எங்களால் இருக்க முடியாது அதனால் 100 போட்டோ எடுத்து உங்க அட்மினிடம் கொடுத்து விட்டு சென்று விடுங்கள் அவரை தினமும் போஸ்ட் போட சொல்லுங்கள் என கூறிய ரசிகர்களின் வேண்டுகோளுக்காக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இவர் பிக்பாஸ்க்குள் இருக்கும் போதும் தினமும் இவருடைய போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருந்தனர்
ரசிகர்கள் ஆனந்தம்
இதனைப் பார்த்து ஆனந்தம் அடைந்த ரசிகர்கள் மீண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியே வந்ததும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் தரிசனத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் இவர் இன்ஸ்டாகிராமில் இதற்கு முன்பு இருந்தது மாதிரி தற்போது ஆக்டிவாக இல்லாமல் இருக்கிறாராம் .அதனால் இவருடைய ரசிகர்கள் இவரை ரொம்பவே மிஸ் பண்ணி வருகின்றனர் .
செம போஸ்ட்
எப்பவாவது போஸ்ட் போட்டாலும் நச்சென போஸ்ட் போட்டு தற்போது ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்திருக்கிறார் .இதற்கு முன்பு இவர் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி என ஒரு பட்டத்தோடு வலம் வந்த இவர் தற்போது வாரத்திற்கு ஒரு போஸ்ட் போட்டு வருகிறார். இது சிலருக்கு ஏக்கமாக இருந்தாலும் அதுவும் தற்போது மாடர்ன் உடையில் கலக்கலாக தொடை தெரியும் வகையில் போட்டோஸ் போடுகிறார்.
மூச்சு முட்ட வைக்கிறாரே
போட்டு பார்ப்பவர்களை மூச்சுமுட்ட வைத்திருக்கிறார். பகலில் நிலவு சீரியலில் பாவாடை தாவணியில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர் தற்போது மாடல் உடையில் உள்ளாடை வெளியில் தெரியும் வகையில் வித்தியாசமாக போட்டோஸ் வெளியிட்டதும் மிரண்டு போன ரசிகர்கள் கமெண்ட் களால் கொஞ்சி வருகின்றனர். கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. கொட்டிக் குவிகிறது!