எடுப்பாய் இருக்கிறது.. மிடுக்காய் காட்டி.. பாடாய்ப்படுத்தும் ஷிவானி!
சென்னை: இருக்கவா நழுவவா என யோசிக்கும் வகையில் புடவையைக் கட்டி, உடுக்கை போன்ற இடுப்பை அப்படியே வசீகரமாக காட்டி பார்ப்பவர்களின் கண்களை பரவசப்படுத்தியுள்ளது ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள்.
ஷிவானி என்னும் பெயரைச் சொன்னாலே இன்ஸ்டாகிராமில் தெரியாதவர்களே இருக்க முடியாது .
அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால்.. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை- மா.சுப்பிரமணியன்
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தாலும் இவர் சீரியலில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் ஹிட்டான பகல்நிலவு சீரியலில் தகதகவென கிராமத்து தேவதையாக பாவாடை தாவணியில் வலம் வந்தவர்.
செம அழகி
இவரை இந்த சீரியலில் பார்த்து அனைவருமே கதாநாயகியே பொறாமை கொள்ளும் பேரழகியாக இருக்கிறாரே அதுவும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என இவரைப் பற்றி பலரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த சீரியலை முடிவடைந்துவிட்டது .ஆனால் சீரியல் முடிவடைந்தாலும் இவருக்கும் அந்த சீரியல் கதாநாயகனுக்கும் காதல் என்று கிசுகிசு ஓயவில்லை.
அப்பவே அப்படி
இவர் அப்போது ஸ்கூல் தான் படித்துக் கொண்டிருந்தார் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் .அந்த அளவிற்கு ஸ்கூல் லைப்லயே கதாநாயகியாக களம் இறங்கிவிட்டார். பள்ளியிலே கதாநாயகியாக மாறிவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் 2k கிட்ஸ் களின் மாடல் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் டுகே கிட்ஸ் முதல் 90 கிட்ஸ் வரை அனைவருமே ரசிக்கும் நடிகையாக இருந்தாலும் டிக் டாக்கில் நம்பர் ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தார் .
சீரியல் வாய்ப்பு
டிக்டாக் மூலமாகத்தான் இவருக்கு பகல் நிலவு சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் முதல் சீரியல் முடிவடைந்ததும் இரட்டை ரோஜா சீரியலில் 2 கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தார் .
வேண்டாம் சீரியல்
இரண்டு கேரக்டரில் நடித்து சீரியலில் படு பிசியாக இருந்தாலும் அவரால் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட முடியவில்லை என அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்து இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைத்து வந்தது .
பிக் பாஸ் பிரபலம்
இந்த நிகழ்ச்சியில் இவருடைய ரசிகர்களால் இவர் இந்த வீட்டிற்குள் நெடுநாட்கள் இருந்தார் .ஆனால் உள்ளே போகும் போது இருந்த ஆர்வம் வெளியே வந்த பிறகு இவருக்கு இல்லையாம். அதனால் இவருடைய ரசிகர்கள் இவர் இன்ஸ்டாகிராமில் முன்ன மாதிரி இப்போது போஸ்ட் போடவில்லை என புலம்பி வருகின்றனர். அதனால் அவர்களின் ஏக்கத்தை தீர்ப்பதற்காக எப்பவாவது ஒரு போஸ்ட் போட்டாலும் சும்மா நச்சுன்னு நங்கூரம் பாய்ச்சியது போல போட்டுவிடுகிறார்.
கவர்ச்சிகரமான சேலை
அந்த மாதிரி தான் தற்போது புடவையில் வித்தியாசமாக போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். எடுப்பாய் தெரியும் இடுப்பை பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைத்து விட்டு காந்த பார்வையால் பார்ப்பவர்களை கவர்ந்திழத்து தலைமுடியை ஒற்றை கையால் கோதி கலக்கியிருக்கிறார். இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்க விட்டு வந்தாலும் சில ரசிகர்கள் இவருடைய போஸ்ட்டை ரிபோஸ்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.