ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? பாடகி கெனிஷா கொடுத்த பதில் என்ன தெரியுமா? ஆர்த்திக்குமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவியுடன் ரகசிய உறவில் இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் பதிலளித்துள்ளார். அது போல் இந்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என நேற்றைய தினம் பிரஸ் மீட்டில் ஜெயம் ரவியும் கேட்டுக் கொண்டிருந்தார்.
தனுஷ் ஐஸ்வர்யா, இமான்- மோனிகா, ஜிவி பிரகாஷ்- சைந்தவி வரிசையில் ஜெயம் ரவியும் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். தங்களை சுற்றியுள்ளவர்களின் நலனுக்காக இந்த கசப்பான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய மனைவி ஆர்த்தி அதிர்ச்சியடைந்து மறுப்பு தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஆர்த்தி கூறியிருந்ததாவது: ரவியிடம் பேசுவதற்கு நான் பல முறை முயற்சித்தும் அது நடக்கவில்லை. எனக்கும் இரு குழந்தைகளுக்கும் என்ன வழி என்பதை போல் ஆர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்துதான் ஜெயம் ரவி கோவாவில் இருந்து கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டார் என தகவல்கள் கிடைத்தன.
மேலும் ஆர்த்தியும் ஜெயம் ரவியை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றால் அங்கு அவர் இல்லை என்றும், ரவி தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என ரவி குடும்பத்தினர் தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியின் அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் ஆர்த்திக்கு நடிகருடன் தொடர்பு, அதனால்தான் விவாகரத்து முடிவு என்றெல்லாம் ஆதாரமில்லாத செய்திகள் காற்றில் பரவின. அதே வேளையில் ஆர்த்தி, ஜெயம் ரவியை எந்த அளவிற்க விரும்பினார் என்ற பழைய பேட்டி வீடியோவும் வெளியாகியிருந்தன.
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் இதுவும் பொய் என்பதை ஜெயம் ரவி நேற்று நடத்திய பிரஸ் மீட்டில் நிரூபித்துவிட்டார்.
ஜெயம் ரவி கூறுகையில் , வாழு வாழ விடு, ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இப்படி செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையம் தொடங்கப் போகிறோம். அதை கெடுக்காதீங்க, யாரும் கெடுக்க முடியாது என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவாவை சேர்ந்த கெனிஷாவை ட்ரோல் செய்வது போல் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் கெனிஷாவின் பதிவில் "ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா" என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கெனிஷா பதிலளிக்கையில், நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா, உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர்தானா என பல்வேறு கேள்விகளை கெனிஷா எழுப்பியுள்ளார். இந்த பதிலை அவர் ஆர்த்திக்கும் சேர்த்து தெரிவித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கெனிஷாவின் பதில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications