Saindhavi : நான் பிராமின் பொண்ணு.. ஆனால் என் மகளுக்காக இதை பண்ணுவேன்! வெளிப்படையாக பேசிய சைந்தவி
சென்னை: பாடகி சைந்தவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது தன்னுடைய மகள் மீது தனக்கு இருக்கும் அன்பை பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதோடு தன்னுடைய மகளுக்கு எதெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் பிராமின் வீட்டு பொண்ணாக இருந்தாலும் தன்னுடைய மகளுக்காக தான் செய்யும் செயலை பற்றி பேசியிருக்கிறார்.
பாடகி சைந்தவி பாடிய பாடல்கள் பலருடைய மனதை வருடும் வகையில் இருக்கும். சோகம், காதல், சந்தோஷம் என எதுவாக இருந்தாலும் சரி அதை வெளிப்படுத்த சைந்தவி பாடிய பாடல்கள் மனதிற்கு நெருக்கத்தை கொடுக்கும். அதிலும் சைந்தவி பாடிய பிறை தேடும் இரவிலே, விழிகளில் ஒரு வானவில், கையிலே ஆகாசம் போன்ற பாடல்கள் எல்லாம் எவர்கிரீன் பாடல்கள் தான்.

சைந்தவி பாடிய இந்த பாடல்கள் பலருடைய செல்போனில் ரிங்டோனாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சைந்தவி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிரபலம் அடைந்த ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ஆத்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தனர். அது பெரிய அளவில் பேசப்பட்டது.
தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷுக்கு, முன்னாள் மனைவி சைந்தவியின் உருக்கமான வாழ்த்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஆனாலும் தங்கள் முடிவில் இருவரும் உறுதியாக இருந்து இப்போது விவாகரத்து ஆகி இருக்கின்றனர். தங்களுக்குள் விவாகரத்து நடந்து விட்டாலும் தாங்கள் எப்போதும் நண்பர்கள் என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் நடத்தும் ஈவெண்டுகளில் சைந்தவி கலந்து கொண்டு பாடல் பாடி கொண்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் உச்சி கொட்டிக் கொண்டிருந்தாலும் அதை எல்லாம் நாங்கள் கண்டு கொள்வதில்லை நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள் மட்டும்தான் என்று சைந்தவி சொல்லி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க சைந்தவி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து இருக்கிறார். சமீபத்தில் கூட சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பொண்ணுக்கு சகோதரியாக மாறி இருக்கிறார்.
அந்த பெண்ணின் தந்தைக்கு கிட்னியில் 80 சதவீதம் செயலிழந்துவிட்டது என்பதால் தாய் தான் கிட்னி கொடுத்து உதவி இருக்கிறார். இதனால் தன் அப்பா மற்றும் அம்மா இருவராலும் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் சைந்தவி இனி நான் உனக்கு கடைசி வரைக்கும் அக்காவாக துணை இருப்பேன் உனக்கு என்ன உதவிகள் என்றாலும் நானே செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சைந்தவி தன்னுடைய மகள் குறித்து பேசி இருந்தார். என்னுடைய மகளுக்கு நான் பாட்டு பாடினாலே பிடிக்காது. நான் பாட்டு பாடினால் தூங்க வைக்க போகிறேன் என்று அழுதுவிடுவாள். குழந்தையாக இருக்கும்போது எல்லா குழந்தைகளும் தாலாட்டு கேட்கும் ஆனால் என்னுடைய மகள் அதற்கு ஆப்போசிட். அவளுக்கு பாட்டு பாடி தூங்க வைக்கிறது பிடிக்காது என்று பேசி இருந்தார்.
அதுபோல என் பொண்ணுக்கு நான்வெஜ் சாப்பாடு ரொம்ப பிடிக்கும் அதிலும் பிரியாணி என்றால் அவளுக்கு அதிகமா பிடிக்கும். அவளுக்காக நான் விதவிதமா சமைப்பேன் என்று சொல்ல, அதற்கு தொகுப்பாளர் நீங்க பிராமின் தானே அப்போ கறி, மீன் எல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க, நான் சாப்பிட மாட்டேன் ஆனால் என்னுடைய பொண்ணுக்கு பிடிக்கும் அதற்காக நான் சாப்பாடு செஞ்சு கொடுப்பேன். என்னுடைய நண்பர்களுக்கும் நான் செஞ்சு கொடுப்பேன் சாப்பிடாமலேயே அவங்களுக்கு செய்து கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications