Siragadikka Aasai serial: ரகசியத்தை உளறிய கிரிஷ் பெரியப்பா! முத்துக்கு தெரிந்த உண்மை! ரோகிணியின் பிளான்
சென்னை:(siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பரபரப்பான தொடரான 'சிறகடிக்க ஆசை'யில், ரோகிணியின் முதல் திருமணம் மற்றும் மகன் கிரிஷ் பற்றிய பெரிய ரகசியம், எதிர்பாராதவிதமாக முத்துவின் மூலம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. கிரிஷின் பெரியப்பாவை முத்து சந்தித்தது, இன்றைய எபிசோடில் பெரியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை சவாரி
கிரிஷின் தந்தை சேகரின் அண்ணன் சுப்ரமணியும் அவரது மனைவியும், 15 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், அதற்காக சிகிச்சை எடுக்கச் சென்னை வந்திருக்கின்றனர். சுப்ரமணி, வித்யாவின் கணவர் முருகனின் உறவினர் என்பதால், அவரைச் சென்னையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, முருகன் முத்துவின் காரை ஏற்பாடு செய்திருந்தார்.
முத்துவின் முடிவு
ஆனால், முதல் நாள் முத்து வீட்டில் அப்பா தனியாக இருந்ததால், அவர் சவாரிக்குச் செல்லவில்லை. அவருக்குப் பதிலாகத் செல்வத்தை அனுப்பி வைத்தார். பின்னர், இரண்டாம் நாள் சவாரிக்கு முத்துவே சுப்ரமணியையும் அவரது மனைவியையும் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கிரிஷின் பெரியப்பா
முத்து அவர்களை காரில் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் எதற்காகச் சென்னை வந்திருக்கிறார்கள் என்றுப் பாசத்துடன் விசாரிக்கிறான். அப்போது, தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததைப் பற்றித் தம்பதிப் புலம்புகிறார்கள். அதற்கு முத்து, "நீங்கள் ஏன் குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது?" என்பதை பற்றிக் கூறுகிறான். இந்த கேள்விக்கு அவர்களும், "நாங்களும் அந்தப் பிளானில் தான் இருக்கிறோம்" என்று பதிலளிக்கிறார்கள்.
அடுத்த ரகசியம்
பிறகு, "என்னுடைய தம்பி மகனை தத்தெடுக்க ஆசைப்படுகிறோம். தற்போது அவனை பார்க்கத்தான் கோவிலுக்குச் செல்கிறோம்" என பேச்சுக் கொடுக்க, ரோகிணி குடும்பத்தின் ரகசியத்தின் அடுத்தப் பகுதியை முத்து அறிய நேரிடுகிறது.
கோவிலில் காத்திருந்த பேரதிர்ச்சி
கோவிலுக்கு வந்ததும், சுப்ரமணியும் அவரது மனைவியும் உள்ளே செல்ல, முத்துவிடம் பூ வாங்கி வரச் சொல்கிறார்கள். முத்து பூ வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுப் பார்க்கையில், அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது! தன்னுடைய காரில் வந்தது கிரிஷின் பெரியப்பா என்கிற விஷயம் அப்போதுதான் முத்துவுக்குத் தெரிய வருகிறது!
கிரிஷ்ஷின் பாசம் முத்துவை பார்த்ததும் கிரிஷ் ஓடிப்போய்க் கட்டிப்பிடித்து விளையாடுகிறார்!. அதைப் பார்த்த அந்தத் தம்பதி முத்துவிடம், "இவனை உங்களுக்கு ஏற்கனவேத் தெரியுமா?" என வினவ, அதற்கு முத்து, "கிரிஷ் கொஞ்ச நாள் எங்க வீட்டில் தான் இருந்தான்" என்று சமாளிக்கிறான். பின்னர், லட்சுமி அவசர வேலை இருப்பதாகக் கூறி, கிரிஷை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். முத்துவும் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்துவிடுகிறார்.
ஷாக்கில் உறைந்த ரோகிணி
வீட்டுக்கு வந்து, கிரிஷின் பெரியப்பாவை பார்த்ததை பற்றி முத்து சொல்ல, அதைக் கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார்! பின்னர், தன்னுடைய அம்மா லட்சுமிக்கு போன் போட்டு, "எதற்காகக் கிரிஷை அவனுடையப் பெரியப்பாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போன?" எனச் சண்டை போடுகிறார். முத்துவுக்குக் கிரிஷ் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியவருவதால், ரோகிணி என்ன செய்வதென்றுத் தெரியாமல் திக்குமுக்காடிப் போகிறார்.
இதைத் தொடர்ந்து என்ன ஆனது? கிரிஷின் அம்மா ரோகிணிதான் என்கிற உண்மையை முத்து கண்டுபிடித்தானா? அல்லது இந்த ரகசியத்தை ரோகிணி மீண்டும் சமாளித்து மூடி மறைப்பாரா? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியும்!
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications