சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த விஷயம்.. போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. இனி பழிவாங்கும் படலம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. இன்றைய (Siragadikka Aasai serial june 19th episode update) ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து - மீனாவை பழிவாங்க சிந்தாமணி புதிய திட்டம் தீட்ட, மறுபுறம் ரோகிணியின் விவாகரத்து முடிவுக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க விஜயாவும் வக்கீலும் களமிறங்கியதால் கதை சூடுபிடித்தது.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

எபிசோட் தொடக்கத்தில் ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்பில் காதல் மற்றும் உறவுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அனைவரும் தங்களது காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நிலையில், மிஸ்ரா மட்டும் ஸ்வேதா மீது உள்ள காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார். இதை கவனித்த முத்து, அவரிடம் நேரடியாக விசாரிக்க முயன்றாலும், மிஸ்ரா சமாளித்து தப்பித்துக் கொள்கிறார். இதனால் மிஸ்ரா - ஸ்வேதா காதல் கதைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்

இதற்கிடையில், ரேகாவை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றது முத்து மற்றும் மீனா தான் என நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தாமணி போலீசாரிடம் பேசுகிறார். மருத்துவமனை சிசிடிவி காட்சிகளையும் காட்டி, முத்து - மீனா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் முத்து மீனா முகமூடி அணிந்திருந்தாலும் அவர்கள் தான் என உறுதியாக கூறி போலீசாரை தூண்டுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

வீடியோ ஆதாரம்

போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயாராகும் நேரத்தில், சிந்தாமணிக்கும் போலீசாருக்கும் ஒரு வீடியோ கிடைக்கிறது. அதில் ரேகா தன்னுடைய விருப்பப்படி தான் வீட்டை விட்டு வந்ததாகவும், யாரும் தன்னை கடத்தவில்லை என்றும் தெளிவாக தெரிவிக்கிறார். மேலும், தன்னை யாராவது கடத்தப்பட்டதாக கூறினால் நீதிமன்றத்தில் நேரடியாக சாட்சி சொல்ல தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

போலீஸ் சொன்ன விஷயம்

இந்த வீடியோவை பார்த்த போலீசார், சட்டப்படி முத்து மற்றும் மீனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கைவிரிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிந்தாமணி, சட்ட வழி பலிக்கவில்லை என்றால் வேறு வழியில் பழிவாங்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

உடனடியாக தனது ஆட்களை தொடர்புகொண்டு முத்து, மீனா மற்றும் சத்யா எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்க என்று கண்காணிக்க சொல்கிறார். "எப்படியாவது ரேகாவை திரும்பக் கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தில் நான் தோற்க மாட்டேன்" என்று சிந்தாமணி சபதம் எடுப்பது அடுத்த கட்ட மோதலுக்கான அறிகுறியாக அமைந்தது.

Siragadikka Aasai serial Vijay TV

விஜயாவின் பிளான்

மறுபுறம், ரோகிணியின் விவாகரத்து விவகாரம் புதிய திருப்பத்தை எடுக்கிறது. ரோகிணி திடீரென விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக விஜயாவும் மனோஜும் வக்கீலிடம் சொல்கின்றனர். இதை கேட்ட வக்கீல் அதிர்ச்சி அடைந்து, "ரோகிணி அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளும் பெண் கிடையாது. இதற்குப் பின்னால் கண்டிப்பாக ஏதோ திட்டம் இருக்கும்" என சந்தேகம் தெரிவிக்கிறார்.

ஆனால் விஜயா, உண்மை தெரிந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, ரோகிணியிடம் நேரடியாக பேசுமாறு வக்கீலை தூண்டுகிறார். அதன்படி வக்கீல் ரோகிணிக்கு போன் செய்து, பணம் கிடைத்தால் விவாகரத்து தருவதாக சொன்னது உண்மையா என கேட்கிறார். அதற்கு ரோகிணி, "அவர்கள் பணத்தை ரெடி பண்ணிட்டாங்களா?" என எதிர்கேள்வி கேட்க, வக்கீலின் சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.

ரோகிணி உண்மையில் விவாகரத்துக்கு தயாரா? அல்லது இதற்குப் பின்னால் இன்னும் பெரிய திட்டம் இருக்கிறதா? அதேபோல் சிந்தாமணியின் கண்காணிப்பில் இருந்து முத்து - மீனா தப்பிப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+