Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகினி முன்பு கையெடுத்து கும்பிட்டு அழுத மீனா.. ஸ்ருதி கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ரோகினி முன்பு பைனான்சியரிடம் மீனா கையெடுத்து கும்பிட்டு முத்துவுக்காக கெஞ்சியதை பார்த்து ரோகினி புது ப்ளான் போடுகிறார்.

siragadikka aasai serial November 18th promo and episode full update

அதே நேரத்தில் ரவியை புரிந்து கொள்ளாத ஸ்ருதிக்கு ரவி இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ரவி ஸ்ருதி இடம் விஜயா தன்னை பார்த்து பேசிய விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்த விஷயத்தையும் சொல்ல அதற்கு ஸ்ருதி சரி போயிட்டு வா என்று சொல்கிறார். அதற்கு ரவி அம்மா உன்னையும் தான் வர சொன்னாங்க. என் மருமகளை கூட்டிட்டு வா இங்கேயே இருன்னு சொன்னாங்க. அம்மா அந்த வீட்டிலேயே நாம ரெண்டு பேரும் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க என்று ரவி கூறுகிறார்.

அதற்கு ஸ்ருதி என்னையும் கூப்பிட்டாங்களா நான் உன்னை மட்டும்தான் கூப்பிட்டாங்கன்னு நினைத்தேன். அதனால நீ என்னை கழட்டி விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சேன் என்று சொல்ல, அதற்கு ரவி என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என்னை அவ்வளவு சீப்பா நினைச்சுட்டல. உயிரே போனாலும் நான் உன்னை பாதியில் விட்டுட்டு போக மாட்டேன் என்று சொல்ல அதை கேட்டதும் ஸ்ருதி கண்கலங்கியபடியே ரவியை கட்டிப்பிடித்துக் கொண்டு சாரி கேட்டு லவ் யூ சொல்கிறார்.

siragadikka aasai serial November 18th promo and episode full update

மறுபக்கத்தில் மீனா காலையில் எழுந்து வேக வேகமாக சமையல் வேலைகளை முடித்து விட அங்கு வரும் விஜயா இன்னைக்கு என்ன பாம்பு போட்டு குழம்பு வச்சிருக்கியா? என்று நக்கல் செய்கிறார். அதற்கு மீனா இது பூண்டு குழம்பு, பூண்டு மட்டும் தான் போட்டு இருக்கு. இது பொறியல் வெறும் காய்கறி தான் மட்டும் தான் போட்டு வச்சிருக்கேன். எதையும் புடிச்சு போட்டு நான் செய்யல என்று பதிலடி கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து அண்ணாமலையிடம் மீனா மாமா நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன் என்று சொல்ல, அதை கேட்டதும் விஜயா தினமும் எங்க ஊர் சுத்த போறா என்று அவமானப்படுத்த அதற்கு மீனா நான் கோயிலுக்கு தான் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அடுத்து ரோகிணி பைனான்ஸியர் வீட்டுக்கு மசாஜ் செய்ய வருகிறார்.

மறுபக்கத்தில் மீனா ஆட்டோவில் எல்லா கோவில்களுக்கும் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு பைனான்சியர் வீட்டிற்கு வருகிறார். பைனான்சியரை பார்த்து பேச வந்த மீனா அங்கு ரோகிணி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். மீனாவை பார்த்த பைனான்சியர் அதான் நேற்று சொல்லிட்டேன்ல, முத்துக்கு கார் கொடுக்க முடியாது.

siragadikka aasai serial November 18th promo and episode full update

அவன் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டால் தான் தெரியும் என்று அவமானப்படுத்த, அதற்கு மீனா கையெடுத்து கும்பிட்டு எனக்காக ஒருமுறை அவரை மன்னிச்சிடுங்க அவர் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுறாரு. போற இடமெல்லாம் அவரை அவமானப்படுத்துறாங்க என்று கண்கலங்கி கேட்கிறார். அதை பார்த்ததும் பைனான்சியர் உன்னை பார்த்தால் பாவமா தான் இருக்கு.

அவனை ஆபீசுக்கு வந்து எல்லாரும் முன்னாடியும் என்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. மன்னிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரோகினி ஓ முத்துவுக்கு வேலை இல்லையா? இது போதுமே என்று அவரை அவமானப்படுத்த பிளான் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+