Siragadikka Aasai promo: கிரிஷால் மீனாவிடம் சிக்கும் ரோகிணி! மனோஜுக்கு நேர்ந்த விபரீதம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், நகைச்சுவை, மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், அடுத்த வாரத்திற்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மனோஜின் தலைகீழ் மாற்றங்கள்
இன்றைய எபிசோடில், மனோஜ் ஒரு பள்ளிக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டது பற்றிப் பெருமையாகப் பேசுகிறார். "என்னை ஒரு ஸ்கூலுக்கு தலைமை விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்" என்று பெருமையாகச் சொல்கிறார். அதைக் கேட்ட முத்து, "இவன் பேசுவதை கேட்கிற பசங்கதான் பாவம்" என்று கிண்டல் செய்கிறார். அதனால் விஜயாவும் ரோகினியும் முத்துவை குறை பேசிக்கொண்டிருக்கும்போது, முத்து மேடையில் பேசுவது போல, "வாழ்க்கையில் என்ன கண்டுபிடித்தாலும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மிகவும் முக்கியம். அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கிட்டு, படிப்பு சொல்லித் தருகிற ஆசிரியரையும் மதித்தாலே தெய்வம் நம்மகூட இருக்கும்" என்று எளிமையாகவும் சிறப்பாகவும் பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெறுகிறார்.
மனோஜின் ஆங்கில பேச்சு
இதைக் கேட்ட அண்ணாமலை, மனோஜிடம், "நீ பேசு" என்று சொல்கிறார். மனோஜ் ஆங்கிலத்தில் ஏதேதோ பேச, யாருக்கும் எதுவும் புரியவில்லை. அப்போது நாய் ஒன்று குரைக்க ஆரம்பிக்கிறது. மனோஜ் பேசுவதெல்லாம் புரியாமல் இருந்த அனைவரும் நாய் குரைத்தவுடன் சிரிக்கிறார்கள். கோபமடைந்த மனோஜ் கல்லை எடுத்து நாயை விரட்டிவிட்டு வருகிறார். "இப்படிப் பேசினால் பசங்க எப்படி கேட்பாங்க?" என அண்ணாமலை கேட்கிறார். அப்போது, நாய் உரிமையாளர் வந்து, "என் நாய்க்கு அடிபட்டுவிட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் கொடுங்கள்" என்று கேட்கிறார். மனோஜ் ₹500 கொடுக்கிறார். அப்போது முத்து, மனோஜைக் கிண்டல் செய்ய, இருவருக்கும் இடையில் வேடிக்கையான வாக்குவாதம் நடக்கிறது.
அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில்
அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மனோஜ் கல்லை எடுத்து அடித்ததால், கோபமடைந்த நாய் அவரைக் கடித்து விடுகிறது. சிகிச்சைக்குச் சென்றபோது, மருத்துவர், "ஒரு வாரத்திற்கு இந்த நாய் சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாய் செத்துப்போனால், இவருடைய நிலைமையும் அவ்வளவுதான்" என்று கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.
கிரிஷ் பள்ளிக்குச் செல்லும் மனோஜ் - மீனா
மனோஜ் தான் ஒரு பள்ளிக்கு விருந்தினராகச் செல்ல இருப்பதாகக் கூறியிருந்ததும், மீனாவும் ஒரு பள்ளியில் டெக்கரேஷன் ஆர்டர் கிடைத்திருப்பதாகச் சொன்னதும், இருவரும் கிரிஷ் படிக்கும் பள்ளிக்குத்தான் செல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் ஒரே இடத்திற்குச் செல்லும்போது, அங்கு என்ன நடக்கும் என்பது அடுத்த வாரத்தில் தெரியும்.
உண்மை அம்பலமாகுமா
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ரோகிணிதான் கிருஷ்ணாவின் அம்மா என்ற உண்மை இந்த வாரமும் தெரியவில்லை. ஆனால், அடுத்த வாரத்தில் மனோஜுக்கு நேர்ந்த விபரீதத்தால், மனோஜ் கிருஷ்ணாவின் பள்ளிக்குச் செல்லும்போது, அந்த உண்மை வெளிப்படுமா? அல்லது இன்னும் சில பில்டப்களுடன் ரசிகர்கள் காக்கப்படுவார்களா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த வாரமும், அடுத்த வாரமும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications