Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial latest promo ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் விஜயாவிற்கு எதிரான ஆதாரத்தை கண்டுபிடிக்கின்றனர். இதனால் மீனா இனி விஜயா வீட்டுக்கு மீண்டும் போகப் போகிறார் என்று தெரிகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. ஏற்கனவே விஜயாவிற்கு மீனாவை சுத்தமாக பிடிக்காது. ஆனால் சிந்தாமணி பிளான்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு போலி சாமியார் விஜயாவின் வீட்டிற்குள் வந்து உங்க இரண்டாவது மருமகளால் தான் இந்த வீட்டிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது, இந்த பொண்ணு உங்க வீட்டில் இருந்தால் உங்க தாலிக்கு பிரச்சனை உங்க புருஷன் உயிருக்கு கண்டிப்பா பிரச்சனை வரும் என்று சொல்லியிருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் கதை

இதை விஜயாவும் நம்பி விட்டார். ஆனால் இந்த போலி சாமியாருக்கு பின்னாடி சிந்தாமணி தான் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சிந்தாமணி தான் செய்த சதி வேலைகளை ரோகிணியிடம் சொல்லி இருந்தார். சூழ்நிலை எப்படி இருக்க, இந்த சாமியாரை பற்றிய ஆகா ஓகோ என்று சிலரை வைத்து பேச வைத்து சிந்தாமணி நாடகம் போட்டிருந்தார். இதையெல்லாம் உண்மை என நம்பி ஏமாந்த விஜயா மீனாவை வீட்டை விட்டு துரத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் முத்துவிற்கு கிடைத்த வேனுக்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு மொத்த குடும்பமும் வந்து இருந்தனர். அப்போது மீனா கோவிலுக்கு வரும் வழியில் ஒரு பெண் தலையில் மூடாக்கு போட்டபடி அவசர அவசரமாக ஓடிப்போனார். பிறகு மீனா கோவிலுக்குள் வந்த நேரத்தில் சீதா தன்னுடைய தாலியை அத்துவிட்டு யாரோ ஓட்டிட்டாங்க என்று சொல்லி இருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

இதனால் மீனாவிற்கு அந்த பெண் மீது சந்தேகம் வந்திருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான (Siragadikka Aasai serial Promo) ப்ரோமோவில் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க மீனா அந்த பெண்ணை துரத்தி ஓடுகிறார். அந்த பெண்ணை பிடித்து தாலியை பிடுங்கும்போது அவருடைய முகத்தை பார்த்து விடுகிறார். அப்போதுதான் இந்த பொண்ணுதானே அன்னைக்கு சாமியாராக வீட்டுக்கு வந்து பேசுனது என்ற உண்மைகளும் மீனாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த போலி சாமியார் மீனாவை தள்ளிவிட்டு விட்டுவிட்டு ஓடி விடுகிறார்.

பிறகு நடந்த விஷயத்தை பற்றி மீனா முத்துவிடம் வந்து சொல்ல அதற்கு விஜயா அந்த பெண் சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க, இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல நீங்க உண்மையை நிரூபிங்க என்று சொன்னதும் முத்துவும், மீனாவும் அந்த போலி சாமியாரை தேடி அலைகின்றனர். அப்போது அங்கிருந்த சிசிடிவியில் அந்த போலி சாமியார் முகம் தெரிகிறது.

இதை வைத்து அந்த போலி சாமியாரை பிடித்து உண்மையை நிரூபித்ததும் மீனா அடுத்த வாரம் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் மீனாவும் முத்துவும் தனி குடித்தனம் போய் வேலை செய்து அவர்கள் குடும்பத்தையே ஒழுங்காக கவனிக்கலாம்.. அதை விட்டுட்டு இந்த விஜயா வீட்டுக்கு வந்து மீனா அடிமையாக வேலை செஞ்சாலும் அங்க மரியாதையே கிடைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை என்று பலரும் கமெண்ட்ஸ்களில் நொந்து கருத்து தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+