அக்காவும் தங்கையும் ஒரே பையனை சைட் அடிக்கறாங்களே... .என்னாகுமோ!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் அப்பாவுக்கு பவுர்ணமி பாப்பாவை பிடிக்காது. ரெண்டாவது மனைவிக்கு பிறந்த பவானியைத்தான் ரொம்ப புடிக்கும். சிறுமியாக இருந்ததிலிருந்து அப்பாவின் வசை கேட்டே இப்போது வளர்ந்தும் விட்டாள் பவுர்ணமி.
பவுர்ணமி, பவானி ரெண்டு பேரும் நல்ல ஒத்துமையா இருப்பாங்க. பவுர்ணமிக்கு அப்பாவின் மேல் ரொம்ப பாசம். அப்பா என்ன சொன்னாலும் பொறுத்துப் போகும் ரகம்.
பக்கத்து ஊரில் ஒரு பணக்காரர் வீடு. அவங்க ஆசையா வளர்த்த ஒரே பையன், பெத்தவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் செய்துக்க மறுக்கறான். எனக்கு பணம் முக்கியமில்லை.. என் மனசுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு அமைஞ்சாதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்.
மாயமோ.. மந்திரமோ... பிறந்த வீடு ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்
இளைஞன்
பணக்கார இளைஞன் ஏழை சிறுவனை தன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர்றான். அப்பா அம்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, சாப்பிட ஒரு கடைக்கு அழைச்சுட்டு வர்றான்.
சாப்பிட
சிறுவனை சாப்பிட கடைக்கு அழைச்சுட்டு வர்றான் இளைஞன். அங்கு ஏற்கனவே பவுர்ணமியும், பவானியும் ஏதோ சாப்பிட்டுக்கொண்டு இருக்காங்க. இவன் வந்து சிறுவனுக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்துட்டு, அழகா சங்கீதம் பாடறான்.
அழகன்
இளைஞன் நல்ல அழகனா இருக்கான்.. அதோட அருமையா பாடறான்...அதை பார்த்த பவுர்ணமியும், பவானியும் ஒருவருக்கு தெரியாமல் ஒருத்தங்க சைட் அடிக்கறாங்க. பவுர்ணமி கிராமத்தில் அப்பாவிற்கு பயந்து வளர்ந்தவ. பவானி அப்பா செல்லத்தில் வெளியூர் என்று படித்து வளர்ந்தவள்.
பவுர்ணமி
ஏழை சிறுவன், ஏண்ணா நீங்க இன்னும் கல்யாணம் செய்துக்கலைன்னு கேட்கறான்.. என் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கலடான்னு சொல்றான் அழகன். உங்களுக்கு எப்படி பொண்ணு வேணும்னு இவன் கேட்க, அருவியின் சாரல் மாதிரி, சிட்டு குருவியின் குரல் இனிமை மாதிரி.. வீசும் தென்றல் மாதிரி... அவ்வளவு ஏன் மொத்தத்துல பவுர்ணமி மாதிரி இருக்கனும்டான்னு சொல்றான்.