ஹேர் ஸ்டைலை மு.க. முத்துக்கு மாற்றிய திமுக.. சிவகார்த்திகேயனை "வளைத்த" விஐபி.. கலைஞர் பாணி: பிரபலம்
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.. அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதில், சினிமா பி.ஆர்.ஓ.,க்கள் இரண்டு பேரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஜனநாயகன் Vs பராசக்தி என்று சொல்வதே தவறு.. ஜனநாயகன் என்பது முழுக்க முழுக்க அரசியல் நெறியுள்ள வசனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே, ஜனநாயகன் படம் வெளியாகும்போது, அதற்கு போட்டியாக ஒரு படம் இருக்க வேண்டும் என்று திமுக தரப்பில் விரும்புகிறார்கள்..

எம்ஜிஆர் முக முத்து
திமுகவுக்கு ஒரு வரலாறு உள்ளது.. முக முத்துவை இப்படித்தான் கொம்பு சீவி விட்டார்கள்.. ஹேர்ஸ்டைலை மாற்றி, எம்ஜிஆர் மாதிரியே அவரை நடிக்க வைத்தார்கள்.. அதேபோல வண்டிக்காரன் மகள் என்ற படத்துக்கு கலைஞர்தான் கதை வசனம் எழுதினார்.. அதில் எம்ஜிஆருக்கு எதிராக, ஜெய்சங்கரை களமிறக்கினார்கள்.. அதாவது சினிமாவில் எம்ஜிஆருக்கு இணையாக ஒருவரை கொண்டு வரும் முயற்சிதான் இதெல்லாம்..
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும்போது, ரஜினியை கொண்டு வந்து மேடையில் உட்கார வைத்தார்கள்.. அதிமுகவுக்கு எதிராகவும் பேச வைத்தார்கள்.. பிறகு அஜித்தை ரெடி பண்ண பார்த்தார்கள்.. ஆனால், ஒரே மேடையில் கதையை முடித்துவிட்டார் அஜித்.. அப்போது முதல் 2010-ல் இருந்து எந்த அரசியல் மேடைக்கும் அஜித் வருவதில்லை.
சிவகார்த்திகேயன்
இப்போது விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை ரெடி செய்கிறார்கள், இப்படி காலம் காலமாக திமுக செய்யக்கூடிய யுக்தியாகும்.. உடனே பாஜக தன்னுடைய அரசியலை இதில் செய்கிறது.. படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் யார்? என்று குடைய துவங்கியிருக்கிறது.
ஏவிஎம் எடுத்த பராசக்தி என்ற டைட்டிலைதான் சிவகார்த்திகேயன் படத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. முறைப்படி இந்த டைட்டிலை படத்யாரிப்பு நிறுவனம் ஏவிஎம்மிடமிருந்து வாங்கி விட்டாலும், பராசக்தி என்றதுமே, கலைஞர் இங்கே கனெக்ட் ஆகிறார்.. திராவிட இயக்க பகுத்தறிவு, மொழிப்போர் தியாகிகளை பற்றி பேசக்கூடிய படம் இதுவாகும்.. சுருக்கமாக சொல்லப்போனால் ஜனநாயகன் போலவே பராசக்தியும் அரசியல் பேசும் படம்..
துப்பாக்கி தந்த விஜய்
எனக்கு பிறகு நீதான் என்று சிவகார்த்திகேயனிடம் "துப்பாக்கியை" தந்துவிட்டபிறகு, இப்போது நடந்து வரும் செயல்பாடுகளுக்கு விஜய்யால் எதுவுமே பேச முடியாது... சிவகார்த்திகேயனை குறை சொல்லவும் முடியாது.. காரணம், இதன் பின்னணியில் முழுமையாக உள்ளது திமுக..
படம் தயாரிப்பது டான் பிக்சர்ஸ்.. யாரிந்த ஆகாஷ் பாஸ்கர்? என்றெல்லாம அமலாக்கத்துறைக்கு பிறகுதான், பின்னணி வெளியே தெரிகிறது.. ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவு என்றால், அவர் வெளிநாட்டுக்கு போய்விட்டார் என்று அர்த்தமல்ல.. நாளைக்கே டெல்லிக்கு ஆகாஷ் பாஸ்கரன் சென்றுவந்தால், இந்த ரெய்டு எல்லாம் காணாமல் போய்விடும்.
அமலாக்கத்துறையால், அதர்வா, ஜிவி பிரகாஷ் போன்றோரும் சிக்குவார்கள் என்று சொல்வதெல்லாம் தவறான செய்தியாகும்..
விசாரணை செய்தால் தங்களது சம்பளத்தை சொல்வார்கள்.. அவ்வளவுதான்.. இதில் எந்த சிக்கலும் வராது.. ஆக, இந்த ரெயிடு பரபரப்பு எல்லாமே இந்த படம் தள்ளிப்போக வேண்டும் என்பதால்தான்.. எனவே இது சிவகார்த்திகேயனுக்கு எதிரானதில்லை.. அவர் நடிக்கும் பராசக்தி படம் ஜனநாயகன் படத்துக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதுதான்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications