Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் சமீப நாட்களாக கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்து பேசப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில பகுதிகளில் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் மக்கள் கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித பதற்றம் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகர் ஸ்ரீமன் (Sriman ) தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பெட்ரோல் பங்கில் நேரடியாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டு மக்களுக்கு முக்கியமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

Sriman LPG Shortage Petrol Diesel

பெட்ரோல் பங்கில் நடந்த அனுபவம்

அந்த வீடியோவில் நடிகர் ஸ்ரீமன் பேசும்போது, "இன்று காலை நான் பெட்ரோல் போடுவதற்காக ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றேன். அங்கே நிறைய கார்கள், பைக்குகள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. எல்லாரும் ஆளாளுக்கு டேங்க் ஃபுல் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். நானும் எனக்கு தேவையான அளவிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பிறகு நான் வேறு ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வரும்போது மீண்டும் அந்த பெட்ரோல் பங்கைக் கடந்து வந்தேன். அப்போது அங்கே 'பெட்ரோல் இல்லை' என்று பலகை வைத்திருந்தது. அதை பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது," என்று கூறினார்.

சுயநலமாக நடந்துகொள்ள வேண்டாம்

மேலும் அவர் தனது வீடியோவில், "எல்லாரும் இருக்குமோ இல்லையோ என்று பயந்து முழு டேங்க் ஃபுல் பண்ணிக் கொண்டு போகிறார்கள். நான் பாதிதான் போட்டேன். ஆனால் எல்லோரும் இப்படியே போட்டி போட்டுக் கொண்டு வாங்கினால் உண்மையில் அவசரமாக தேவைப்படுபவர்களுக்கு பெட்ரோல் கிடைக்காமல் போய்விடும்," என்று கூறினார்.

அதன்பிறகு அவர் பார்த்த ஒரு சம்பவத்தையும் கூறினார். "நான் வரும்போது ஒரு மனிதர் தனது பைக்கை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரை பைக்கில் உட்கார வைத்து கொண்டு தள்ளிக் கொண்டு சென்றார். அவருக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை போல தோன்றியது. இன்னும் எவ்வளவு தூரம் அவர் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று தெரியவில்லை," என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.

தேவையில்லாமல் வாகனம் பயன்படுத்த வேண்டாம்

இந்த நிலையை மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"இந்த மாதிரி சூழ்நிலையில் தேவையில்லாமல் வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் அவசியம் இருந்தால் மட்டும் நேரில் செல்லுங்கள். இல்லையென்றால் தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம். அப்படி செய்தால் தான் இந்த சூழ்நிலையை நாமெல்லாம் கடந்து வர முடியும்," என்றார்.

சிறிய பிரச்சனை வந்தாலே பதற்றம்

மேலும் அவர் ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டார். "ஒரு சின்ன பிரச்சனை வந்தாலே மக்கள் எல்லோரும் பயந்து பொருட்களை அதிகமாக வாங்கி வீட்டில் சேமித்து வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு காய்கறிகள் பற்றாக்குறை என்று ஒரு செய்தி வந்தாலே மக்கள் அதிகமாக வாங்கிவிடுகிறார்கள். அதனால் அந்த பொருளின் விலை திடீரென உயர்ந்து விடுகிறது.

அதே மாதிரி இப்போது பெட்ரோல் விஷயத்திலும் நடக்கிறது. எல்லோரும் தங்களுக்கு மட்டும் வேண்டும் என்று வாங்கிக்கொண்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்," என்று அவர் கூறினார்.

சமூக வலைதளங்கள் குறித்து ஆதங்கம்

அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "ஒரு தகவல் வந்தவுடன் அது உண்மையா இல்லையா என்று கூட சரியாக ஆராயாமல் பலர் உடனே நெகட்டிவாக கமெண்ட் போடுகிறார்கள். சிலர் ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள். இது சரியான நடைமுறை இல்லை," என்றும் அவர் கூறினார்.

டீசல் தட்டுப்பாடு

சில இடங்களில் டீசல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தற்காலிக தாமதம்,சில பகுதிகளில் அதிகமான தேவை, மக்கள் பதற்றத்தால் அதிக அளவில் வாங்குவது, இவை போன்ற காரணங்களால் சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது போல தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கான தீர்வு என்ன

டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு சூழ்நிலையில் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் ஒத்துழைப்பும் மிக முக்கியம்.

தேவையான அளவிற்கு மட்டும் எரிபொருள் வாங்க வேண்டும், தேவையில்லாமல் வாகனம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும், அவசர தேவைக்கு எரிபொருள் கிடைக்கும்படி மற்றவர்களையும் நினைக்க வேண்டும். இந்த முறைகளை பின்பற்றினால் இத்தகைய தற்காலிக சிக்கல்களை எளிதாக சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது கருத்தை ஆதரித்து "இந்த சூழ்நிலையில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+