இனி அதிரடி சண்டை காட்சிகளுக்கும் ஆஸ்கர்.. ஆர்ஆர்ஆர் ஸ்டண்ட் உடன் அறிவிப்பை வெளியிட்ட அகாடமி அமைப்பு
நியூயார்க்: உலகெங்கும் உள்ள சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்க்கும் விருது நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் தான். தற்போது வரை 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்போது அத்துடன் புதிதாகச் சண்டைக் காட்சிகளுக்கான ஆஸ்கரை வழங்க அகாடமி அமைப்பு முடிவு செய்துள்ளது.
சினிமாவுக்கு என்னதான் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும் கூட அதன் உச்சமாக ஆஸ்கர் விருதுகள் தான் கருதப்படும். ஒவ்வொரு ஆண்டும் உலகமே எதிர்பார்க்கும் சினிமா விருதுகள் நிகழ்ச்சியாக ஆஸ்கர் விருதுகள் இருந்து வருகிறது. ஹாலிவுட் மட்டுமின்றி உலகளவில் வெளியாகும் படங்களுக்கும் ஆஸ்கர் அமைப்பு விருதுகளை வழங்கும்.

23 பிரிவுகளில் ஆஸ்கர்
தற்போது சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம், சிறந்த கதை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட 23 போட்டி பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்கர் விருதுகளில் போட்டி பிரிவில் சிறந்த ஸ்டண்ட் என்ற பிரிவில் தனியாக விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அதிரடி ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களும் அதை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற ஆக்ஷன் படங்களுக்கு ஸ்டண்ட் தான் முக்கியம்.. ஸ்டண்ட் எந்தளவுக்கு அட்டகாசமாக இருக்கிறதோ.. படமும் அந்தளவுக்கு ஹிட் அடிக்கும். இதன் காரணமாகவே சிறந்த ஸ்டண்ட் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்..
சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர்
இதற்கிடையே ஸ்டண்ட்டை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் என்று ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி அமைப்பு அறிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு ஆஸ்கர் 100வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், அப்போது முதல் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவின் தொடக்க நாட்களிலிருந்தே ஸ்டண்ட் கலை என்பது சினிமாவின் ஒரு பகுதியாக இருந்து வந்த நிலையில், அதற்கு இப்போது அங்கீகாரம் கிடைக்கிறது.
தி ஃபால் கை, புல்லட் டிரெயின் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களை இயக்கி முன்னாள் ஸ்டண்ட் இயக்குநர் டேவிட் லீட்ச் என்பவர் ஸ்டண்ட் வடிவமைப்பிற்கு ஏன் ஆஸ்கர் வழங்கப்பட வேண்டும் என்பதை விளக்கிப் பல முறை அகாடமி அமைப்பிற்கு பிரசன்டெஷன்களை முன்மொழிந்திருந்தார். அதைத் தொடர்ந்தே அகாடமி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகாடமி அமைப்பு
புதிய பிரிவை அறிவித்த அகாடமி, "சண்டைப் படங்கள் எப்போதும் சினிமா மாயாஜாலத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இப்போது அவை ஆஸ்கர் விருதுகளின் ஒரு பகுதியாகிறது. ஸ்டண்ட் டிசைனில் சாதனை படைத்ததற்காக அகாடமி ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது.. 2027ம் ஆண்டு வெளியாகும் ஆஸ்கர் படங்களைக் கவுரவிக்கும் வகையில் 2028இல் நடைபெறும் 100வது ஆஸ்கர் விழா முதல் இவை தொடர்ச்சியாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர்
மேலும், இது குறித்த அறிவிப்பில் மொத்தம் மூன்று படங்களின் போஸ்டர்கள் இடம்பெற்று இருந்தது. அதில் அட்டகாசமான ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர் போன மிஷன் இம்பாசிபிள், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் காட்சிகளுடன் இணைந்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் காட்சியும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு படலுக்காக 2023ல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications