Rajini Sundar C: ரஜினி படத்தை ஒதுக்கிவிட்டு சுந்தர் சி யார் கூட படம் பண்றாரு பாருங்க.. அட நம்ம புரட்சி தளபதி
சென்னை: தமிழ் சினிமாவின் “கமர்ஷியல் கிங்” எனப் புகழப்படும் இயக்குனர் சுந்தர் சி, 90களின் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை மினிமம் கியாரண்டியாக சக்சஸ் கொடுப்பதில் வல்லவர். அவர் தொடர்பான புதிய தகவல்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் சுந்தர் சி மும்முரமாக உள்ளார். இதற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் ஒரு பிரம்மாண்ட படத்தை அவர் இயக்கவிருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில நாட்களிலேயே சுந்தர் சி இந்தப் படத்திலிருந்து விலகியதாக வெளியான அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
அவர் விலகியதற்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 'மசாலா' அப்டேட்: விஷாலுடன் மீண்டும் ஒரு கூட்டணி
ரஜினி-கமல் படத்திலிருந்து விலகிய பிறகு, சுந்தர் சி-யின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அடுத்ததாக, முன்னணி ஆக்ஷன் ஹீரோ விஷாலை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தைத் இயக்க சுந்தர் சி தயாராகி வருகிறார். ஏற்கெனவே வெற்றி பெற்ற இவர்களின் கூட்டணியில் இது ஒரு புதிய படமாக அமையவுள்ளது.
இப்படம் ஒரு முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகும். சுந்தர் சி பாணியில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். விஷால்-தமன்னா கூட்டணி ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆக்ஷன் படத்திற்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும்.
இந்த புதிய கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர் சி-யின் டைமிங்கும், விஷாலின் ஆக்ஷனும் இணைந்து திரை ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் இல்லைன்னா, புரட்சி தளபதி - என்ற மோடுக்கு போய்விட்டார் சுந்தர் சி.
-
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications