அவசர அவசரமாக முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்..? காரணம் இதுதானா..? ஆனாலும் இப்படி ஒரு டுவிஸ்டா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியல் எதனால் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலின் கடைசி கதை என்ன மாதிரி இருக்கப் போகிறது என்ற தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக சுந்தரி சீரியல் இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அல்லது மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் திடீரென்று முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியல் இரண்டு வருடங்களாக மேலாக ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சீரியலின் முடிவு குறித்து சீரியலின் தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
அதே நேரத்தில் சுந்தரி சீரியல் கதை ஆரம்பிக்கும் போது அதிகமான வரவேற்பு இருந்த நிலையில், இப்போது சீரியல் சுவாரசியம் குறைந்துவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். காரணம் அணு பல வருடங்களாகவே கர்ப்பமாக இருப்பது போன்று சீன் போய்க் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் ஊரில் தான் ஒரு ஐஏஎஸ் ஆபிஸராக வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்த சுந்தரி கார்த்தியை கல்யாணம் செய்த பிறகு அவருடைய கேரக்டர் மற்றும் அவர்தான் அணுவின் கணவர் என்று தெரிந்தும் அதை குடும்பத்தினரிடமிருந்து மறைத்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் டுவிஸ்ட் என்கிற பெயரில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியும், இறந்து போவதுபோன்றும் சீன்களும் வந்து கொண்டே இருந்தது.

கார்த்திக் மற்றும் அணு உடைய திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று சுந்தரி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரிவதற்கு முன்பும் ரசிகர்களை பாடாய்ப்படுத்தி எடுத்து விட்டார்கள்.இந்த நிலையில் தொடர்ச்சியாக சுந்தரி சீரியலுக்கு சமீபத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டே இருந்தது.
சுந்தரி கருப்பான பெண்ணாக இருந்து இந்த சமூகத்தில் சந்திக்கும் அவலங்களை பற்றி இந்த சீரியலில் காட்டி, பிறகு அவர் சாதித்து வெற்றி பெற்றது போன்று கதை இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக சுந்தரி படும் அவமானங்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் கோவிலில் பரிகாரம் என்ற முறையை அதிகமான ரசிகர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியல் திடீரென்று இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து கதை வேகமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது. இப்போது ஒரு வழியாக சுந்தரி இன்டர்வியூக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கார்த்தி பற்றிய மொத்த விஷயங்களும் அணுவிற்கு தெரிய இருக்கிறது. இந்த நிலையில் அணுவின் பிரசவத்தோடு அணு இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அணுவின் குழந்தையை சுந்தரி வளர்த்து ஆளாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இனி கதை எப்படி மாறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications