என்ன சாதி? கோயிலில் அருணா சந்தித்த அவமானம்.. சூப்பர் சிங்கர் வெற்றியாளர் வாழ்வில் இத்தனை சோகங்களா?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் 9 வது சீசனின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அருணா, கோயில்களிலில் பாடும்போது அவரது சாதியை கேட்டு பலர் அவமதித்து இருக்கிறார்கள். என்ன நடந்தது?
விஜய் டிவியில் கடந்த 6 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் இறுதிப்போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 2 சுற்றாக நடைபெற்ற இப்போட்டியில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அருணா முதல் பரிசை தட்டிச் சென்றார்.

2 வது பரிசை பிரியா ஜெர்சனும், 3 வது பரிசை பிரசன்னாவும் வென்றனர். இறுதிச்சுற்றுக்கு முதலில் முன்னேறிய அபிஜித்தும், 2 வதாக முன்னேறிய பூஜாவும் முதல் 3 இடங்களுக்குள் வரவில்லை. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சூப்பர் சிங்கர் சீசனை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்று உள்ளார் அருணா.
வெற்றிபெற்ற அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையில் வழங்கப்பட்டது. 2 வது பரிசை வென்ற பிரியா ஜெர்சனுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், 3 வது பரிசை வென்ற பிரசன்னாவுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்புடைய பரிசும் வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கரை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்த அருணா, கடந்த வந்த பாதைகள் கரடு முரடானவை. குறிப்பாக ஜாதி என்ற முள் அவரது நெஞ்சை தைத்தது போட்டது. இசை மேதை பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் பூமியான சீர்காழியில் இருந்து மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அருணா. இவரும் அவரது சகோதரி அகிலாவும் இரட்டையர்கள்.
இசை மீது ஆர்வம் கொண்ட இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுத்தவர் அவரது பாட்டிதான். இருவரையும் கோயில்களில் நடக்கும் பாட்டு வகுப்புகளில் சேர்த்துவிட்டு தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்தது அவர்தான். இப்படி கோயில்களில் திருமுறை பாடி இசைத் திறனை வளர்த்துக்கொண்ட அருணாவும் அகிலாவும் சினிமா பாடல்களை கேட்காமலேயே வளர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால், ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடக்கூடாது என்பதற்காக இசைத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள திரைப்பட பாடல்களை கேட்டு பாடி பழகி சூப்பர் சிங்கருக்குள் நுழைய ஆடிசனில் பங்கேற்றனர். இதில் அருணா டாப் 20 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார். அவரது அசாத்திய பாடல் திறன், குரல் வளத்தை நடுவர்கள் தொடங்கி பலரும் வியந்து பாராட்டினர்.
குறிப்பாக சிறப்பு விருந்தினராக வந்த இசையமைப்பாளர் தேவா, இசையமைப்பாளர் கங்கை அமரன், இசையமைப்பாளர் வித்யாசாகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் சாம் சி எஸ் என பலரும் அவரது குரலை பாராட்டினார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி, அருணாவை பாராட்டியது மட்டுமின்றி தனது இசையில் ஒரு திரைப்படத்தில் பாடுவதற்கும் வாய்ப்பளித்தார். பாடல் வரிகளை எழுதுவதிலும் திறன் கொண்ட அருணா, சில நொடிகளில் பாடலை எழுதி அதற்கு 10 நிமிடங்களில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து கொடுத்தார்.
இப்படி பல்வேறு திறன்களை தன்னகத்தே கொண்ட அருணாவை சாதி என்ற கொடூர முள் தைத்து உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் பாடி முடித்த பிறகு பேசிய அருணா, "எங்கள் குடும்பம் பானை தயாரிக்கும் தொழில் செய்து வந்தது. நாங்கள் கோயிலில் எல்லாம் பாட செல்வோம். என்னதான் நாம் பாடினால் பாடி முடிந்த பிறகு எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் என்ன சாதி என்பதுதான்." என்று வேதனையோடு சொல்லி இருப்பார்.
இதனை கேட்ட நடுவர்கள், இசைக்கு சாதி, மதம் கிடையாது. என்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அடுத்தடுத்த எபிசோடுகளில் தன்னிடம் சாதி என்ன என்று கேட்டவர்கள் முன்னிலையில் மேன்மேலும் சாதித்துக்கொண்டே சென்ற அருணா, இன்று 17 ஆண்டுகால சூப்பர் சிங்கரின் முதல் பெண் வெற்றியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்து உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications