10th ரிசல்ட்.. பாட்டோடு படிப்பில் சாதித்த சூப்பர் சிங்கர் ஹர்ஷினி.. மார்க் இவ்வளவா? அரசு பள்ளி மாஸ்
சென்னை: இன்று 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஹர்ஷினி நேத்ரா தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் அவர் பெற்ற மதிப்பெண்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் பல மாணவர்கள் தாங்கள் நினைத்த மதிப்பெண் வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் தாங்கள் எதிர்பார்க்கிற மதிப்பெண் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருந்தாலும் அடுத்து பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இதைவிட படிப்பில் கவனம் செலுத்தினால் அதிகமான மதிப்பெண்கள் பெறலாம்.

இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹர்ஷினி நேத்ரா இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். அவர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 384 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாராம். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஹர்ஷினி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்ததால் அதிகமாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஆனாலும் படிப்பிலும் சரி பாடலிலும் சரி ஒரே போல கவனம் செலுத்தியதால்தான் என்னால் இந்த மதிப்பெண்கள் பெற முடிந்தது. 384 மதிப்பெண் என்பது குறைவானது கிடையாது என்று எனக்கு தோன்றுகிறது. பாடலில் நான் எல்லாருடைய குரலையும் எடுத்துப் பாடுவது குறித்து எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள். அது எனக்கு கிடைத்த வரம் என்று தான் நான் சொல்வேன்.

அதே நேரத்தில் நான் சென்னையில் இப்போது கவர்மெண்ட் ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பதினொன்றாம் வகுப்பில் எக்கனாமிக்ஸ் எடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 450 மதிப்பெண்களுக்கு மேலே பெறுவேன் என்று வீட்டில் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்ததால் என்னால் சரியாக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்தோடு ஹர்ஷினி பேசியிருக்கும் நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி இப்போது மதிப்பெண் குறைந்து விட்டாலும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுங்கள் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications